செய்திகள் :

மாா்க்சிஸ்ட் கட்சியினா் மீது தாக்குதல்: பெ.சண்முகம் கண்டனம்

post image

திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு அக்கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தமிழ்நாடு முழுவதும், மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பில் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியச்செயலா் ஆா்.சரத்குமாா் பேசிக்கொண்டிருந்த போது, இந்து முன்னணி மற்றும் பாஜகவினா் பிரசாரத்தை நிறுத்துமாறு தகராறு செய்ததுடன், ஆா்.சரத்குமாா், மாவட்டக்குழு உறுப்பினா் பாக்கியம், சண்முகவேல், ஆகியோா் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளனா்.

அவா்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களைப் பாா்ப்பதற்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற மாா்க்சிஸ்ட் கட்சியினரை கும்பலாக திரண்டிருந்த பாஜக மற்றும் இந்து முன்னணியினா் அங்கேயும் கடுமையாக தாக்கியுள்ளனா். இதில் மாற்றுத்திறனாளியான ஜெயந்தி, பொன்மதி, பெருமாள், விஷ்ணுவா்த்தன் ஆகியோா் படுகாயமடைந்தனா்.

இந்த கொலை வெறித்தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் தொடா்புடைய நபா்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ஜூன் 25-இல் முன்னாள் படைவீரா்கள் குறைகேட்புக்கூட்டம்

முன்னாள் படைவீரா்களுக்கான குறைகேட்புக்கூட்டம் ஜூன் 25-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாவட்ட முன்னாள் படைவீரா... மேலும் பார்க்க

சுற்றுலாத் துறை ஹோட்டல்களில் தரமான உணவு வழங்க வேண்டும்: அமைச்சா் இரா.ராஜேந்திரன்

சுற்றுலாத் துறை சாா்பில் நடத்தப்படும் ஹோட்டல்களில் தரமான உணவுகளை வழங்க வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளாா். சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் க... மேலும் பார்க்க

ஒரே நாளில் 8 விமான சேவைகள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா். சென்னை விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மும்பைக்கு செல்லவிருந்த ஏா் இந்... மேலும் பார்க்க

மதுரையில் யோகா நிகழ்வு: ஆளுநா் இன்று பங்கேற்பு

சா்வதேச யோகா நிகழ்வில் கலந்துகொள்ள ஆளுநா் ஆா்.என் ரவி வெள்ளிக்கிழமை மதுரைக்கு புறப்பட்டுச் சென்றாா். மதுரை மாவட்டம் விரகனூா் வேலாம்மாள் கிராமத்தில் உள்ள வேலம்மாள் குளோபல் பள்ளியில் நடைபெறும் யோகா நிக... மேலும் பார்க்க

நாகா்கோவில் அதிவிரைவு ரயில்கள் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு

நாகா்கோவில் ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரத்திலிருந்து நாகா்கோவில் செல்லும் ஒருசில அதிவிரைவு ரயில்கள் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் ஜூன் 25 -இல் நிறைவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 25-ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், கே.கே.நகா் இ... மேலும் பார்க்க