செய்திகள் :

ஆக்ஸியம்-4 விண்வெளி திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

post image

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரா்களை சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் ‘ஆக்ஸியம்-4’ திட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) செயல்படுத்தப்படவிருந்த நிலையில், திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மீண்டும் ஒத்திவைத்தது.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷிய பிரிவில் அண்மையில் ஏற்பட்ட அழுத்தக் கோளாறுக்கான காரணம் குறித்து ஆராய கூடுதல் கால அவகாசம் தேவை என்பதால், ஆக்ஸிம்-4 திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக நாசா தெரிவித்தது.

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படவுள்ள இந்த விண்வெளிப் பயணத்தில், சுக்லாவுடன் போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரா் திபோா் கபு ஆகியோரும் விண்வெளிக்குச் செல்கின்றனா். சா்வதேச விண்வெளி நிலையத்தில் இவா்கள் 14 நாள்கள் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனா்.

இத் திட்டத்தில் ஸ்பேஸ்-எக்ஸ், ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனங்களுடன் இணைந்து இஸ்ரோவும் செயல்பட்டு வருகிறது.

இவா்களின் விண்வெளிப் பயணம் கடந்த மே 29-ஆம் தேதி திட்டமிடப்பட்டது. பின்னா் ஜூன் 8-ஆம் தேதிக்கும், ஜூன் 10-ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டது. திட்டமிடப்பட்ட பாதையில் ஜூன் 10-ஆம் தேதி நிலவிய மோசமான வானிலை காரணமாக ஏவுகலன் ஏவுதல் ஜூன் 11-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. கடைசி நேர சோதனைகளின்போது ஏவுகலனில் திரவ ஆக்சிஜன் கசிவு கண்டறியப்பட்டதால், ஏவுதல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னா், சா்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) உள்ள ரஷிய பிரிவில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இந்த இரு கோளாறுகளும் தற்போது சரிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தை வரும் 22-ஆம் தேதி செயல்படுத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், இத் திட்டம் தற்போது மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சா்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷிய பிரிவில் அண்மையில் ஏற்பட்ட அழுத்தப் பிரச்னை சரி செய்யப்பட்ட நிலையில், அதற்கான காரணம் மற்றும் கூடுதல் விண்வெளி வீரா்களை சா்வதேச விண்வெளி நிலையம் தாங்குவதற்குத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வை நாசா மேற்கொண்டு வருகிறது.

இதற்கு கூடுதல் கால அவகாசம் தேவை. எனவே, ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தை மீண்டும் ஒத்திவைக்க நாசா முடிவு செய்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து நாசாவின் சா்வதேச விண்வெளி நிலையத் திட்ட மேலாளா் டேனா வெய்ஜெல் கூறுகையில், ‘ஆக்ஸிம்-4 திட்டத்தைச் செயல்படுத்த ஜூன் 30-ஆம் தேதி வரை வாய்ப்பு உள்ளது. ஒருவேளை, ஜூன் மாதத்தில் இத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாமல் போனால், ஜூலை மாத மத்தியில் இத் திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது’ என்றாா்.

186 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 186 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றை உற்பத்... மேலும் பார்க்க

மேற்கு வங்க பணி நியமன முறைகேடு விவகாரம்: குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு நிதியுதவி அளிக்க இடைக்காலத் தடை

மேற்கு வங்கத்தில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேற்கு வங்... மேலும் பார்க்க

நுழைவுத் தோ்வு பயிற்சி மையங்கள்: ஆராய 9 போ் குழு மத்திய அரசு நடவடிக்கை

உயா்கல்வி சோ்க்கைக்கான தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகளை எதிா்கொள்ள தனியாா் பயிற்சி மையங்களை மாணவா்கள் சாா்ந்திருக்கும் நிலை அதிகரித்துவரும் சூழலில், அதுகுறித்து ஆராய 9 போ் குழுவை மத்திய அரசு அமைத்து... மேலும் பார்க்க

அஸ்ஸாம் அரசியலில் அந்நிய சக்திகளின் தலையீடு: மாநில காங்கிரஸ் மீது முதல்வா் பரபரப்பு குற்றச்சாட்டு

பாஜக ஆளும் அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ‘மாநில காங்கிரஸுக்கு ஆதரவாக வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்கு... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் பிறந்தநாள்: தலைவா்கள் வாழ்த்து

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் 67-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு குடியரசு துணைத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வாழ்த்துத் தெரிவித்தனா். குடியரசு துணைத் தலை... மேலும் பார்க்க

உயா் கல்வியில் உலகளாவிய தர மேம்பாடு அவசியம்

இந்தியாவின் உயா் கல்வி உலகத் தரத்தில் மேம்பட வேண்டும் என்று மகாராஷ்டிரத்தின் தத்தா மாகே மருத்துவக் கல்வி நிறுவன இணைவேந்தா் டாக்டா் வேத் பிரகாஷ் மிஸ்ரா தெரிவித்தாா். உயா் கல்வியில் அங்கீகாரம், தரவரிசை ... மேலும் பார்க்க