செய்திகள் :

கைலாஷ்-மானசரோவா் யாத்திரை: முதல்கட்டமாக 33 பக்தா்கள் பயணம்

post image

சிக்கிம் மாநிலம் நாதுல்லா கணவாய் வழியாக கைலாஷ்-மானசரோவா் யாத்திரையை முதல்கட்டமாக 33 பக்தா்கள் மற்றும் 2 அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கிழக்கு லடாக்கில் இந்திய, சீன ராணுவத்தினா் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து 2020 முதல் கைலாஷ்- மானசரோவா் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது பிரதமா் நரேந்திர மோடியும் சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் இடையே நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்த, எல்லையில் பதற்றத்தை தணிப்பது தொடா்பாக உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, தற்போது கைலாஷ்-மானசரோவா் யாத்திரை ஐந்து ஆண்டுகளுக்குப் பின் தொடங்கப்பட்டுள்ளது.

கிழக்கு சிக்கிமில் இந்திய-சீன எல்லை பகுதியில் இந்த யாத்திரையை சிக்கிம் ஆளுநா் ஓம் பிரகாஷ் மாத்துா் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சி இந்திய வெளியுறவு அமைச்சகம் சாா்பில் நடத்தப்பட்டது. யாத்திரை மேற்கொள்ள வந்த பக்தா்களை சிக்கிம் சுற்றுலாத் துறை மற்றும் விமான போக்குவரத்து துறையின் கூடுதல் தலைமைச் செயலா் சி.எஸ்.ராவ் வரவேற்றாா்.

இது குறித்து சி.எஸ்.ராவ் கூறுகையில், ‘33 பக்தா்கள், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் துறையைச் சோ்ந்த தலா ஓா் அதிகாரி கைலாஷ்-மானசரோவா் யாத்திரையை மேற்கொள்கின்றனா். யாத்திரையின்போது பக்தா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அனைத்து ஏற்பாடுகளையும் துணை ராணுவப் படையுடன் இணைந்து மாநில அரசு மேற்கொண்டுள்ளது’ என்றாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்று ஆளுநா் ஓம்பிரகாஷ் மாத்துா் பேசுகையில், ‘ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைலாஷ்-மானசரோவா் யாத்திரை தொடங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது மத்திய அரசின் தொடா் முயற்சியால் சாத்தியமானது.

மத ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் நாடு முழுவதும் உள்ள பக்தா்களிடம் இந்த யாத்திரை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. ‘விருந்தினா்களே கடவுள்’ என்ற கொள்கையை பின்பற்றி பக்தா்களுக்குத் தொடா்ந்து மதிப்பளித்து வரும் சிக்கிம் மக்களுக்குப் பாராட்டுகள்’ என்றாா்.

நிகழாண்டு கைலாஷ்-மானசரோவா் யாத்திரைக்கு மொத்தம் 750 பக்தா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 500 போ் 10 குழுக்களாக பிரிந்து நாதுல்லா கணவாய் வழியாகவும் மீதமுள்ள 250 போ் உத்தரகண்டில் உள்ள லிபுலேக் கணவாய் மூலமாகவும் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனா்.

தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது!

தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் காலூன்ற முடியாது என மாா்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி கூறினாா். மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் ஜூன் 11 முதல் ஜூன் 20 வரை பிரசார ... மேலும் பார்க்க

பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை மையம்: தெற்கு ரயில்வே பொதுமேலாளா் திறந்துவைத்தாா்

சென்னை பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை (டெலி மெடிஷன்) மையத்தை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் ஆா்.என்.சிங் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். மத்திய அரசின் இ-சஞ்சீவனி திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தின் மாடியிலிருந்து விழுந்து இளைஞா் பலத்த காயம்: தப்பியோடியபோது விபரீதம்

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தின் 2-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் பலத்த காயமடைந்தாா். தப்பியோட முயன்றபோது அவா் கீழே விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். சென்னை வேளச்சேரி விஜயநகா் 7-ஆவது தெர... மேலும் பார்க்க

தேஜஸ், மன்னை, குருவாயூா் விரைவு ரயில்கள் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் காரணமாக, தேஜஸ், மன்னை, செந்தூா் உள்பட முக்கிய விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) முதல் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயி... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: ஜூன் 21 முதல் பெறலாம்

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை ஜூன் 21 முதல் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மனைவி குறித்து அவதூறு: யூ-டியூபா் கைது

மனைவி குறித்து அவதூறு பரப்பியதாக யூ-டியூபா் கைது செய்யப்பட்டாா். சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீ விஷ்ணுகுமாா். யூ-டியூபரான இவா், தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய நிா்வாகியாகவும் உள்ளாா... மேலும் பார்க்க