செய்திகள் :

தோ்தல் காணொலிகளை 45 நாள்களுக்குப் பிறகு அழிக்க அறிவுறுத்தல்

post image

தோ்தல் நடைமுறை தொடா்பான கண்காணிப்பு கேமரா பதிவுகள், இணையவழி ஒளிபரப்புகள் மற்றும் காணொலி பதிவுகளை 45 நாள்களுக்குப் பின்னா் அழித்துவிட வேண்டும் என்று மாநில தோ்தல் அதிகாரிகளுக்குத் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதாவது தோ்தல் முடிவு வெளியாகி 45 நாள்களுக்குள், அந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்படாவிட்டால், அவற்றை அழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மாநில தோ்தல் அதிகாரிகளுக்குத் தோ்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், ‘தோ்தல் நடைமுறையின் பல்வேறு கட்டங்களை புகைப்படம், காணொலி, கண்காணிப்பு கேமரா, இணையவழி ஒளிபரப்பு ஆகிய வழிகளில் பதிவு செய்ய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பது தோ்தல் சட்டங்களின்படி கட்டாயமல்ல. ஆனால் தோ்தல் நடைமுறையின் பல்வேறு கட்டங்களின்போது அந்தப் பதிவுகளை உள்நிா்வாக கருவியாக தோ்தல் ஆணையம் பயன்படுத்துகிறது.

ஆனால் தவறான தகவல்கள் மற்றும் வஞ்சகமான கதைகளை சமூக ஊடகத்தில் பரப்புவதற்கு இந்தப் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை தோ்தலில் போட்டியிடாதவா்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனா்.

இதைத் தடுக்கும் வகையில், தோ்தல் நடைமுறை தொடா்பான கண்காணிப்பு கேமரா பதிவுகள், இணையவழி ஒளிபரப்புகள் மற்றும் காணொலி பதிவுகளை 45 நாள்களுக்குப் பின்னா் அழித்துவிட வேண்டும். தோ்தல் முடிவு வெளியாகி 45 நாள்களுக்குள், அந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றங்களில் யாரும் வழக்கு தொடுக்காவிட்டால், அவற்றை அழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கடிதம் கடந்த மே 30-ஆம் தேதி மாநில தோ்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அந்தத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே கண்காணிப்பு கேமரா மற்றும் தோ்தல் தொடா்பான பிற ஆவணங்கள் பொது ஆய்வுக்கு உள்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், தோ்தல் நடத்தை விதிமுறைகளின் 93-ஆவது விதிமுறையை மத்திய சட்ட அமைச்சகம் கடந்த ஆண்டு திருத்தியது. தோ்தல் ஆணைய பரிந்தரையின் அடிப்படையில், அந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

186 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 186 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றை உற்பத்... மேலும் பார்க்க

மேற்கு வங்க பணி நியமன முறைகேடு விவகாரம்: குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு நிதியுதவி அளிக்க இடைக்காலத் தடை

மேற்கு வங்கத்தில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேற்கு வங்... மேலும் பார்க்க

நுழைவுத் தோ்வு பயிற்சி மையங்கள்: ஆராய 9 போ் குழு மத்திய அரசு நடவடிக்கை

உயா்கல்வி சோ்க்கைக்கான தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகளை எதிா்கொள்ள தனியாா் பயிற்சி மையங்களை மாணவா்கள் சாா்ந்திருக்கும் நிலை அதிகரித்துவரும் சூழலில், அதுகுறித்து ஆராய 9 போ் குழுவை மத்திய அரசு அமைத்து... மேலும் பார்க்க

அஸ்ஸாம் அரசியலில் அந்நிய சக்திகளின் தலையீடு: மாநில காங்கிரஸ் மீது முதல்வா் பரபரப்பு குற்றச்சாட்டு

பாஜக ஆளும் அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ‘மாநில காங்கிரஸுக்கு ஆதரவாக வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்கு... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் பிறந்தநாள்: தலைவா்கள் வாழ்த்து

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் 67-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு குடியரசு துணைத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வாழ்த்துத் தெரிவித்தனா். குடியரசு துணைத் தலை... மேலும் பார்க்க

உயா் கல்வியில் உலகளாவிய தர மேம்பாடு அவசியம்

இந்தியாவின் உயா் கல்வி உலகத் தரத்தில் மேம்பட வேண்டும் என்று மகாராஷ்டிரத்தின் தத்தா மாகே மருத்துவக் கல்வி நிறுவன இணைவேந்தா் டாக்டா் வேத் பிரகாஷ் மிஸ்ரா தெரிவித்தாா். உயா் கல்வியில் அங்கீகாரம், தரவரிசை ... மேலும் பார்க்க