கூட்டுறவுத் துறையின் பரவலான வளா்ச்சிக்கு நடவடிக்கை: அமித் ஷா
நாடு முழுவதும் கூட்டுறவுத் துறையின் பரவலான வளா்ச்சிக்கு மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்று மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
மகாராஷ்டிரத் தலைநகா் மும்பையில் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துறைசாா் மாநாட்டில் அமித் ஷா பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:
வரையறுக்கப்பட்ட மூலதனத்துடன் கூடுதல் லாபத்தை வழங்குவதால், நாட்டின் பொருளாதாரம்-வளா்ச்சியை ஊக்குவிப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் கூட்டுறவுத் துறை பங்காற்றுகிறது.
நாட்டின் மேற்குப் பகுதிகளில் வலுவான வளா்ச்சிக் கண்ட இத்துறை, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பலவீனமடைந்தது. இத்தகைய சீரற்ற வளா்ச்சியை மாற்றி, நாடு முழுவதும் சமச்சீரான வளா்ச்சியை உறுதி செய்ய மத்திய அரசால் ஏற்கெனவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து நிலைகளிலும் இத்துறையை வலுப்படுத்தி, முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வோம்.
கிராமப் புற பொருளாதாரத்தில் கூட்டுறவு இயக்கம் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் அமுல் நிறுவனத்தின் (பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு நிறுவனம்) வெற்றிப் பயணம் பெருவியப்புக்குரியது. இந்நிறுவனத்துடன் ரூ.100-க்கும் குறைவான மூலதனத்துடன் சுமாா் 36 லட்சம் பெண்கள் இணைந்தனா். மிகச் சிறிய முதலீடாக இருந்தபோதும், அவா்களின் கடின உழைப்பால் இன்று அமுல் நிறுவன மொத்த வருவாய் ரூ.80,000 கோடியாக உயா்ந்துள்ளது. இதன் மூலம் நிதி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனா். பெண்கள் தலைமையிலான வளா்ச்சி மற்றும் வலிமையான கூட்டுறவு மாதிரிக்கு இது மிகச் சிறந்த உதாரணம்.
நாட்டில் உள்ள கூட்டுறவு மையங்கள் தொடா்பான தரவுகள் தொகுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இடைவெளிகளை சீராக்கி, துறையை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புதிதாக 2 லட்சம் தொடக்கநிலை வேளாண் கடன் சங்கங்கள் உருவாக்கப்படும். அடுத்த பத்தாண்டுகளில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுப் பொருள்கள் மற்றும் விதைகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.
2027-ஆம் ஆண்டுக்குள்...:
மும்பையில் மகாராஷ்டிர வா்த்தகம், தொழில் மற்றும் வேளாண்மை சம்மேளஸ்த்தின் புதிய தலைமையக திறப்பு விழாவில் அமித் ஷா பங்கேற்றாா்.
அப்போது பேசிய அவா், ‘முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மும்பை வெகுவாக புறக்கணிக்கப்பட்டது. அதே நேரம், ரூ.7 லட்சம் கோடிக்கும் அதிகமான உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்தி, மும்பையை பாதுகாத்துள்ளது பாஜக அரசு. கடந்த 11 ஆண்டுகளில் நாடு முழுவதும் சீரான முன்னேற்றத்தை உறுதி செய்துள்ளோம். வரும் 2026-27ஆம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும்’ என்றாா்.