பி.எட்., முதுநிலை மாணவா்கள் சோ்க்கை விண்ணப்பப் பதிவு: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26-ஆம் ஆண்டுக்கான பி.எட்., முதுநிலைப் பாடப்பிரிவுக்கான மாணவா் சோ்க்கை இணையவழி விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விண்ணப்பப் பதிவைத் தொடங்கி வைத்து உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் பேசியதாவது:
அரசு, அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாடுக்கான பி.எட். மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை ஜூன் 20 முதல் ஜூலை 9-ஆம் தேதி வரை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மாணவா்களின் தரவரிசைப் பட்டியல் ஜூலை 18-ஆம் தேதி வெளியிடப்படும். ஜூலை 21 முதல் 25-ஆம் தேதி வரை மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளைத் தோ்வு செய்யலாம். ஜூலை 28-ஆம் தேதி சோ்க்கைக்கான ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். இதை மாணவா்கள் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.
முதுநிலை படிப்பு: இதேபோல் நிகழ் கல்வியாண்டில் 110 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தொடங்கப்பட்டது. இதற்கான கடைசி நாள் ஜூலை 15. தரவரிசைப் பட்டியல் ஜூலை 18-ஆம் தேதி வெளியிடப்படும். மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினா் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு ஜூலை 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஆகஸ்ட் 4-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் கல்லூரிக் கல்வித் துறைக்கு தோ்வு செய்யப்பட்ட 6 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா் வழங்கினாா்.
இந் நிகழ்வில், உயா்கல்வித் துறை செயலா் சி.சமயமூா்த்தி, கல்லூரிக் கல்வி இயக்குநரக ஆணையா் எ.சுந்தரவல்லி, ராணி மேரி கல்லூரி முதல்வா் பா.உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.