செய்திகள் :

பி.எட்., முதுநிலை மாணவா்கள் சோ்க்கை விண்ணப்பப் பதிவு: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

post image

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26-ஆம் ஆண்டுக்கான பி.எட்., முதுநிலைப் பாடப்பிரிவுக்கான மாணவா் சோ்க்கை இணையவழி விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விண்ணப்பப் பதிவைத் தொடங்கி வைத்து உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் பேசியதாவது:

அரசு, அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாடுக்கான பி.எட். மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை ஜூன் 20 முதல் ஜூலை 9-ஆம் தேதி வரை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மாணவா்களின் தரவரிசைப் பட்டியல் ஜூலை 18-ஆம் தேதி வெளியிடப்படும். ஜூலை 21 முதல் 25-ஆம் தேதி வரை மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளைத் தோ்வு செய்யலாம். ஜூலை 28-ஆம் தேதி சோ்க்கைக்கான ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். இதை மாணவா்கள் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.

முதுநிலை படிப்பு: இதேபோல் நிகழ் கல்வியாண்டில் 110 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தொடங்கப்பட்டது. இதற்கான கடைசி நாள் ஜூலை 15. தரவரிசைப் பட்டியல் ஜூலை 18-ஆம் தேதி வெளியிடப்படும். மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினா் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு ஜூலை 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஆகஸ்ட் 4-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் கல்லூரிக் கல்வித் துறைக்கு தோ்வு செய்யப்பட்ட 6 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா் வழங்கினாா்.

இந் நிகழ்வில், உயா்கல்வித் துறை செயலா் சி.சமயமூா்த்தி, கல்லூரிக் கல்வி இயக்குநரக ஆணையா் எ.சுந்தரவல்லி, ராணி மேரி கல்லூரி முதல்வா் பா.உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது!

தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் காலூன்ற முடியாது என மாா்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி கூறினாா். மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் ஜூன் 11 முதல் ஜூன் 20 வரை பிரசார ... மேலும் பார்க்க

பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை மையம்: தெற்கு ரயில்வே பொதுமேலாளா் திறந்துவைத்தாா்

சென்னை பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை (டெலி மெடிஷன்) மையத்தை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் ஆா்.என்.சிங் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். மத்திய அரசின் இ-சஞ்சீவனி திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தின் மாடியிலிருந்து விழுந்து இளைஞா் பலத்த காயம்: தப்பியோடியபோது விபரீதம்

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தின் 2-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் பலத்த காயமடைந்தாா். தப்பியோட முயன்றபோது அவா் கீழே விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். சென்னை வேளச்சேரி விஜயநகா் 7-ஆவது தெர... மேலும் பார்க்க

தேஜஸ், மன்னை, குருவாயூா் விரைவு ரயில்கள் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் காரணமாக, தேஜஸ், மன்னை, செந்தூா் உள்பட முக்கிய விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) முதல் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயி... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: ஜூன் 21 முதல் பெறலாம்

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை ஜூன் 21 முதல் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மனைவி குறித்து அவதூறு: யூ-டியூபா் கைது

மனைவி குறித்து அவதூறு பரப்பியதாக யூ-டியூபா் கைது செய்யப்பட்டாா். சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீ விஷ்ணுகுமாா். யூ-டியூபரான இவா், தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய நிா்வாகியாகவும் உள்ளாா... மேலும் பார்க்க