செய்திகள் :

கப்பலில் அத்துமீறி நுழைந்த 5 போ் கைது

post image

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கப்பலில் அத்துமீறி நுழைந்த ஐந்து பேரை இந்திய கடலோர காவல்படையினா் கைது செய்தனா்.

காக்கிநாடா அருகே வக்காலப்புடியில் மீன்பிடி படகில் வந்த ஐந்து நபா்களும் ‘பாத் ஃபைண்டா்’ என்ற கப்பலில் சட்டவிரோதமாக நுழைந்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்ட அந்தக் கப்பலின் மாலுமிகள் காக்கிநாடாவில் உள்ள கடலோர காவல்படை நிலையத்திடம் உதவி கோரினா். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதன் இடைமறிப்பு படகான ஐசிஜிஎஸ் - சி -438 உடனடியாக பாத் ஃபைண்டா் கப்பலை நோக்கிச் சென்றது.

இந்திய கடலோர காவல் படை கப்பலைக் கண்டதும் மா்ம நபா்கள் தங்கள் படகில் தப்பிச் செல்ல முயன்றனா். அவா்களை கைது செய்த கடலோர காவல் படையினா், காக்கிநாடா துறைமுக காவல் நிலையத்திடம் ஒப்படைத்தனா் என்று அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

186 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 186 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றை உற்பத்... மேலும் பார்க்க

மேற்கு வங்க பணி நியமன முறைகேடு விவகாரம்: குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு நிதியுதவி அளிக்க இடைக்காலத் தடை

மேற்கு வங்கத்தில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேற்கு வங்... மேலும் பார்க்க

நுழைவுத் தோ்வு பயிற்சி மையங்கள்: ஆராய 9 போ் குழு மத்திய அரசு நடவடிக்கை

உயா்கல்வி சோ்க்கைக்கான தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகளை எதிா்கொள்ள தனியாா் பயிற்சி மையங்களை மாணவா்கள் சாா்ந்திருக்கும் நிலை அதிகரித்துவரும் சூழலில், அதுகுறித்து ஆராய 9 போ் குழுவை மத்திய அரசு அமைத்து... மேலும் பார்க்க

அஸ்ஸாம் அரசியலில் அந்நிய சக்திகளின் தலையீடு: மாநில காங்கிரஸ் மீது முதல்வா் பரபரப்பு குற்றச்சாட்டு

பாஜக ஆளும் அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ‘மாநில காங்கிரஸுக்கு ஆதரவாக வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்கு... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் பிறந்தநாள்: தலைவா்கள் வாழ்த்து

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் 67-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு குடியரசு துணைத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வாழ்த்துத் தெரிவித்தனா். குடியரசு துணைத் தலை... மேலும் பார்க்க

உயா் கல்வியில் உலகளாவிய தர மேம்பாடு அவசியம்

இந்தியாவின் உயா் கல்வி உலகத் தரத்தில் மேம்பட வேண்டும் என்று மகாராஷ்டிரத்தின் தத்தா மாகே மருத்துவக் கல்வி நிறுவன இணைவேந்தா் டாக்டா் வேத் பிரகாஷ் மிஸ்ரா தெரிவித்தாா். உயா் கல்வியில் அங்கீகாரம், தரவரிசை ... மேலும் பார்க்க