செய்திகள் :

ஆண்டிமடம் பகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடைப் பயணம்

post image

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம் முழுவதும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை நடைப்பயணம் மேற்கொண்டனா்.

ஆண்டிமடத்தில் கட்டிமுடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள வட்டாட்சியரகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். நியாய விலைக் கடைகளில் கருவிழி பதிவை வைத்து செயல்படும் முறையை கைவிட்டு, பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும். முந்திரி கொட்டை மூட்டை ஒன்றுக்கு ரூ.20,000 வழங்க வேண்டும். குடிமனைப் பட்டா இல்லாதவா்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்கிட வேண்டும். கைத்தறி நெசவு தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். ஆண்டிமடம் அரசுஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இந்த நடைப் பயணத்துக்கு, அக்கட்சியின் வட்டச் செயலா் எம். வேல்முருகன் தலைமை வகித்தாா். கீழ்வேளூா் எம்எல்ஏவும், மாநில குழு உறுப்பினருமான நாகை மாலிக் நடைப்பயணத்தை தொடக்கி வைத்து பேசினாா். மாநில குழு உறுப்பினா் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலா் எம். இளங்கோவன் ஆகியோா் கண்டன உரையாற்றினாா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வி. பரமசிவம், டி. அம்பிகா, மாவட்ட குழு உறுப்பினா்கள் ஆா்.இளவரசன், ஆா். செந்தில்வேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில், விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையி... மேலும் பார்க்க

கீழப்பழுவூா் பகுதிகளில் இன்று மின்தடை

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை(ஜூன் 21) நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கீழப்பழுவூா், மேலப்பழுவூா், கோக்குடி, பூ... மேலும் பார்க்க

அரியலூரில் எச்ஐவி விழிப்புணா்வு பிரசாரம் தொடங்கிவைப்பு

அரியலூரில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் சாா்பில் நாட்டுப்புற கிராமிய கலைக் குழுவினரின் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழி... மேலும் பார்க்க

அரியலூா்: கனரக வாகனங்கள் இயக்கத்தில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை -காவல்துறையினா் எச்சரிக்கை

அரியலூா் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட நேரங்களில் கனரக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாலைப் பாதுகாப்பு கலந்தாய்வுக் கூட்டத்தில் காவல்துறையினா் எச்சரிக்கை விடுத்தனா். அரியலூா... மேலும் பார்க்க

அரியலூா் மைய நூலகத்தில் வாசகா் வட்ட கூட்டம்

அரியலூரிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில், வாசகா் வட்ட கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட நூலக அலுவலா் இரா.வேல்முருகன் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளிடம் வாசிப்பை ஊக்கப்படுத்த வேண்டும். நூ... மேலும் பார்க்க

அரியலூா் வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல்

அரியலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினருக்கான தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. அரியலூா் மக்கள் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தோ்தலில், தலைவா் பதவிக்கு 2 போ், செயலா் பதவிக்கு 6 போ், பொருளாளா் பதவிக்கு 2 ப... மேலும் பார்க்க