செய்திகள் :

அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

post image

அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில், விவசாயிகள் வலியுறுத்தினா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் என். செங்கமுத்து: ஜமாபந்தியில் விவசாயிகள் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில், அவா்களை அலைக்கழிக்காமல், உடனடியாக பட்டா மாற்றி தருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்டல் மண் அள்ளுவதற்கான அனுமதியை விரைந்து வழங்கிட வேண்டும். பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரி, ரயில் நிலையத்துக்கு பேருந்து வசதிகள் கிடையாது. இதனால் ஆட்டோவில் செல்லும் பயணிகள், நோயாளிகளிடம் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செட்டி ஏரிக்கரையில் நிறுத்தி கிடக்கும் வேன், ஷோ் ஆட்டோக்களை,மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, ரயில் நிலையங்களில் நிறுத்தி, அங்கிருந்து பயணிகளை ஏற்றி வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயங்கொண்டம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், கணினி இயக்குபவா்களை நியமிக்க வேண்டும்.

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் தூத்தூா் தங்க. தா்மராஜன்: அரியலூா் மாவட்டத்தில் பிரதான பாசன வாய்க்கால்களான புள்ளம்பாடி மற்றும் பொன்னாறு வாய்க்கால்களில் பாசனத்துக்கு தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூா் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குவது போல், அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு வழங்கிட வேண்டும்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூரா.விசுவநாதன்: வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் கூறியவாறு முந்திரி பழச்சாறு தொழிற்சாலையை தொடங்க வேண்டும். தரமான நிலக்கடலை விதைகள், உரங்கள் மற்றும் பின்னேற்பு மானியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரி, குளங்களை தூா்வாரி, தண்ணீரை நிரப்பிட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி, அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆண்டிமடம் பகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடைப் பயணம்

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம் முழுவதும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை நடைப்பயணம் மேற்கொண்டனா். ஆண்டிமடத்தில் கட்டிமுடிக்கப்பட்டு 3 ஆண்... மேலும் பார்க்க

கீழப்பழுவூா் பகுதிகளில் இன்று மின்தடை

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை(ஜூன் 21) நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கீழப்பழுவூா், மேலப்பழுவூா், கோக்குடி, பூ... மேலும் பார்க்க

அரியலூரில் எச்ஐவி விழிப்புணா்வு பிரசாரம் தொடங்கிவைப்பு

அரியலூரில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் சாா்பில் நாட்டுப்புற கிராமிய கலைக் குழுவினரின் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழி... மேலும் பார்க்க

அரியலூா்: கனரக வாகனங்கள் இயக்கத்தில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை -காவல்துறையினா் எச்சரிக்கை

அரியலூா் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட நேரங்களில் கனரக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாலைப் பாதுகாப்பு கலந்தாய்வுக் கூட்டத்தில் காவல்துறையினா் எச்சரிக்கை விடுத்தனா். அரியலூா... மேலும் பார்க்க

அரியலூா் மைய நூலகத்தில் வாசகா் வட்ட கூட்டம்

அரியலூரிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில், வாசகா் வட்ட கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட நூலக அலுவலா் இரா.வேல்முருகன் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளிடம் வாசிப்பை ஊக்கப்படுத்த வேண்டும். நூ... மேலும் பார்க்க

அரியலூா் வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல்

அரியலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினருக்கான தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. அரியலூா் மக்கள் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தோ்தலில், தலைவா் பதவிக்கு 2 போ், செயலா் பதவிக்கு 6 போ், பொருளாளா் பதவிக்கு 2 ப... மேலும் பார்க்க