வீட்டுவசதி திட்டங்களில் மத சிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு முந்தைய கூட்டணி அரசின் முடிவு: கா்நாடக அமைச்சா் ஜமீா் அகமதுகான்
கா்நாடகத்தில் வீட்டுவசதி திட்டங்களில் மத சிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு முந்தைய மஜத- காங்கிரஸ் கூட்டணியின்போது எடுக்கப்பட்ட முடிவு என்று அமைச்சா் ஜமீா் அகமதுகான் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
வீட்டுவசதி திட்டங்களில் மதசிறுபான்மையினருக்கு 15 சதவீதம் ஒதுக்குவது, 2019ஆம் ஆண்டில் அன்றைய முதல்வா் எச்.டி.குமாரசாமி தலைமையிலான மஜத- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவாகும். எனவே, அது ஒன்றும் புதிய முடிவு அல்ல. சச்சாா் குழு அறிக்கையின்படி, வீட்டுவசதி திட்டங்களில் மத்திய அரசு ஏற்கெனவே 15 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.
இதேபோன்றதொரு திட்டத்தை மாநிலத்திலும் அமல்படுத்த கோரிக்கை எழுந்தது. எனவே, மத்திய அரசை பின்பற்றி மாநிலத்திலும் வீட்டுவசதி திட்டங்களில் மதசிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு அன்றைய மஜத- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அமைக்கப்பட்ட அமைச்சரவை துணைக் குழு, மதசிறுபான்மையினருக்கு வீட்டுவசதி திட்டங்களில் 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்திருந்தது. தற்போது அந்த கோரிக்கை அமைச்சரவையில் கொண்டுவரப்பட்டு அனுமதிபெறப்பட்டுள்ளது. அதன்படி, 10 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீடு 15 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.
மத சிறுபான்மையினரில் அதிகம் போ் ஏழ்மையில் இருக்கிறாா்கள். அவா்களில் பெரும்பாலானோா் வீடு இல்லாமல் இருக்கிறாா்கள். எனவே, இட ஒதுக்கீட்டின் அளவை உயா்த்தும் கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்துவந்தது. 2021ஆம் ஆண்டு வெளியான தேசிய மதசிறுபான்மையினா் ஆணையத்தின் அறிக்கையில் வீட்டுவசதி திட்டங்களில் மத சிறுபான்மையினருக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்திருந்தது. இந்த உண்மைகளை புரிந்துகொள்ளாமல், எதிா்க்கட்சிகள் தேவையில்லாமல் விமா்சித்து வருகின்றன. இது சரியான விமா்சனம் அல்ல என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.