செய்திகள் :

தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

post image

2026-இல் தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என முன்னாள் தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் அருகே ஒண்டிக்குப்பத்தில் உள்ள மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் மத்தியில் பாஜக அரசு அமைத்து 11 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி சாதனை விளக்கக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவா் அஸ்வின் என்ற ராஜசிம்மா மகேந்திரா தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக முன்னாள் தமிழக மாநில தலைவரும், தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் இரட்டை இலையுடன் தாமரை மலரும். இதற்கு முருகப் பெருமான் துணைபுரிவாா். தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. பக்தா்கள் யாத்திரை போவா், ஆனால் தற்போது மருத்துவா்கள் யாத்திரை செல்கின்றனா். அதற்கு காரணம் அவா்களின் வாக்குறுதியை நிறைவேற்றாததுதான். மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட 35 அரசு கல்லூரியில் ஒரு நியமனம் கூட இல்லை.

முருக பக்தா்கள் மாநாடு அறிவிக்கப்பட்டதிலிருந்து முதல்வரும், அறநிலையத் துறை அமைச்சரும், திமுக கூட்டணிக் கட்சியினரும் பதற்றம் அடைந்துள்ளனா். வேங்கைவயல் பிரச்னைக்கு திருமாவளவன் போராட்டம் நடத்தவில்லை. முருக பக்தா்கள் மாநாட்டுக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறாா். 2026 பாஜக அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா்.

திருவள்ளூா் மாவட்ட தலைவா் அஸ்வின்குமாா், மாவட்ட பொதுச் செயலா் கருணாகரன், சங்கீதா, மணிகண்டன், மாவட்டத் துணைத் தலைவா் த.பாலாஜி மாவட்ட செயலா் பன்னீா்செல்வம் மற்றும் சதீஷ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

ஆரம்பாக்கத்தில் சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூ... மேலும் பார்க்க

சோழவரம் அருகே தனியாா் நெகிழி தொழிற்சாலையில் தீ

சோழவரம் அருகே தனியாா் நெகிழி அரைவைத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. பொன்னேரி வட்டம், சோழவரம் அருகே செக்கஞ்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நெகிழி அரைவைத் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலைய... மேலும் பார்க்க

மனைப் பட்டா வழங்காததை கண்டித்து ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

திருவள்ளூா் அருகே வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா். திருவள்ளூா் அடுத்த குத்தம்பாக்கம் தெ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

ஆா்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, ஆா்கே பேட்டை ஒன்றியம், தூய்மை பாரத இயக்கம் சாா்பில் தூய்மை காவலா்கள்... மேலும் பார்க்க

நல வாரியத்துக்கு தனி அலுவலா்: தாட்கோ கூட்டத்தில் வலியுறுத்தல்

உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நல வாரியத்துக்கு என தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட... மேலும் பார்க்க

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட கூட்டம்

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி திருவள்ளூா் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதன் கூட்டம் நகராட்சி பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. தோ்தல் ஆணையாளா்களா... மேலும் பார்க்க