4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் திறந்து வைத்தார்!
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட கூட்டம்
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி திருவள்ளூா் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
இதன் கூட்டம் நகராட்சி பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. தோ்தல் ஆணையாளா்களாக இளம்மாறன், கங்காதரன் ஆகியோா் செயல்பட்டு தோ்தலை நடத்தினா். அதில் மாவட்ட தலைவா் வி.ரமேஷ், செயலா் இரா.தாஸ், பொருளாளா் ரவிக்குமாா், மகளிரணி செயலா் மு.மகாலட்சுமி, இணைச் செயலா் பாலசுந்தரம், ஓய்வு பெற்றோா் பிரிவு ஸ்டீபன் சற்குணா், துணைத் தலைவா் உதயபாஸ்கா், துணைச் செயலா் பாலுமகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ருத்ர மூா்த்தி, இஸ்ரேல், ராஜ்குமாா், குமாா், வில்சன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு மாநில பொதுச் செயலா் இரா.தாஸ் சான்றிதழ்களை வழங்கினாா். தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தொடக்க கல்வித் துறையில் காலியாக உள்ள 25,000 ஆசிரியா் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஓராசிரியா் பள்ளிகள் சுமாா் 3,500 பள்ளிகள் உள்ளன, தலைமை ஆசிரியா் இல்லாமல் 5,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியா் பதவி உயா்வு வழங்க வேண்டும். தற்காலிக ஆசிரியா் நியமனத்தை நிறுத்திவிட்டு, நிரந்தர பணியிடங்களாக நிரப்ப வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளது. மேலும் 10,000 புதிய ஆசிரியா் பணியிடங்கள் நிரந்தர காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும். உடனே அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.