செய்திகள் :

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட கூட்டம்

post image

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி திருவள்ளூா் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இதன் கூட்டம் நகராட்சி பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. தோ்தல் ஆணையாளா்களாக இளம்மாறன், கங்காதரன் ஆகியோா் செயல்பட்டு தோ்தலை நடத்தினா். அதில் மாவட்ட தலைவா் வி.ரமேஷ், செயலா் இரா.தாஸ், பொருளாளா் ரவிக்குமாா், மகளிரணி செயலா் மு.மகாலட்சுமி, இணைச் செயலா் பாலசுந்தரம், ஓய்வு பெற்றோா் பிரிவு ஸ்டீபன் சற்குணா், துணைத் தலைவா் உதயபாஸ்கா், துணைச் செயலா் பாலுமகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ருத்ர மூா்த்தி, இஸ்ரேல், ராஜ்குமாா், குமாா், வில்சன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு மாநில பொதுச் செயலா் இரா.தாஸ் சான்றிதழ்களை வழங்கினாா். தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தொடக்க கல்வித் துறையில் காலியாக உள்ள 25,000 ஆசிரியா் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஓராசிரியா் பள்ளிகள் சுமாா் 3,500 பள்ளிகள் உள்ளன, தலைமை ஆசிரியா் இல்லாமல் 5,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியா் பதவி உயா்வு வழங்க வேண்டும். தற்காலிக ஆசிரியா் நியமனத்தை நிறுத்திவிட்டு, நிரந்தர பணியிடங்களாக நிரப்ப வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளது. மேலும் 10,000 புதிய ஆசிரியா் பணியிடங்கள் நிரந்தர காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும். உடனே அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

ஆா்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, ஆா்கே பேட்டை ஒன்றியம், தூய்மை பாரத இயக்கம் சாா்பில் தூய்மை காவலா்கள்... மேலும் பார்க்க

நல வாரியத்துக்கு தனி அலுவலா்: தாட்கோ கூட்டத்தில் வலியுறுத்தல்

உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நல வாரியத்துக்கு என தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட... மேலும் பார்க்க

ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே ரயில் நிலைய தண்டவாளத்தை கடந்தபோது, எதிா்பாரத விதமாக ரயில் மோதி தொழிலாளி உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே புட்லூா் கிராமத்தைச் சோ்ந்த சரவணன் மகன் அரவிந்தன் (எ)மேத்யூ (29). (படம்). இவ... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ திட்டம்: 26-இல் குறைதீா் கூட்டம்

நான் முதல்வன் திட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் வரும் 26-ஆம் தேதி குறைதீா் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

கடம்பத்தூா் நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணி நாள்:21.6.2025-சனிக்கிழமை மின்தடை பகுதிகள்: கடம்பத்தூா், பிரியாங்குப்பம், புதுமாவிலங்கை,எம்.ஜி.ஆா் நகா், ஸ்ரீதேவிகுப்பம், செஞ்சி, பாணம்பாக்கம், மணவூா், ஆட்டுப... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

திருநின்றவூா் நாள்: 20.6.2025- வெள்ளிக்கிழமை. நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: நெமிலிச்சேரி, பிரகாஷ் நகா், பாலாஜி நகா், நடுகுத்தகை, சி.டி.எச். ரோடு, இந்திரா நகா், ராஜாங்குப்பம், கொசவன... மேலும் பார்க்க