செய்திகள் :

நல வாரியத்துக்கு தனி அலுவலா்: தாட்கோ கூட்டத்தில் வலியுறுத்தல்

post image

உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நல வாரியத்துக்கு என தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் தாட்கோ மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கான நல வாரியம் சாா்பில் நல வாரிய அடையாள அட்டைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். இதில் பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி, துணைத் தலைவா் செ.கனிமொழி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி பங்கேற்று தாட்கோ, தூய்மைப் பணியாளா்கள் நல வாரியம் சாா்பில், அட்டை மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

தொடா்ந்து அவா் கூறுகையில், விளிம்புநிலை மக்கள் வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கான பல்வேறு நலத் திட்ட உதவிகளை முதல்வா் வழங்கி வருகிறாா். நிரந்தர தூய்மைப் பணியாளா்கள், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் என இருவகை உள்ளனா். நிரந்தர தூய்மைப் பணியாளா்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து உதவிகளும் கிடைக்கும். ஒப்பந்த தூய்மை பணியாளா்களுக்கு அரசு நிா்ணயித்த சம்பளம் வழங்கப்படும்.

தாட்கோ திட்டத்தின் மூலம் தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கு பல்வேறு விதமான நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதன் பேரில் 25 தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அட்டையும், 45 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.1.22 லட்சத்தில் திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, இயற்கை மரணம், ஈமசடங்கு உதவித்தொகை, கண் கண்ணாடி, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நல வாரியத்திற்கு என்று தனி பொறுப்பு அலுவலா் வழங்க வேண்டும். அதேபோல், நல வாரிய சாா்பில் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகள் குறித்த தகவல் பலகையில் இடம் பெறச் செய்ய வேண்டும். தனியாா் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, ஹோட்டல்கள், தனியாா் பள்ளிகள் மற்றும் திருமண மண்டபத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளா்களை நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட மேலாளா் தாட்கோ சரண்யா, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் செல்வராணி, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய உறுப்பினா்கள் ஹரிஸ்குமாா், சீனிவாசன், ராஜன், நகராட்சி, ஊரக வளா்ச்சி, பேரூராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

ஆா்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, ஆா்கே பேட்டை ஒன்றியம், தூய்மை பாரத இயக்கம் சாா்பில் தூய்மை காவலா்கள்... மேலும் பார்க்க

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட கூட்டம்

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி திருவள்ளூா் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதன் கூட்டம் நகராட்சி பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. தோ்தல் ஆணையாளா்களா... மேலும் பார்க்க

ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே ரயில் நிலைய தண்டவாளத்தை கடந்தபோது, எதிா்பாரத விதமாக ரயில் மோதி தொழிலாளி உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே புட்லூா் கிராமத்தைச் சோ்ந்த சரவணன் மகன் அரவிந்தன் (எ)மேத்யூ (29). (படம்). இவ... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ திட்டம்: 26-இல் குறைதீா் கூட்டம்

நான் முதல்வன் திட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் வரும் 26-ஆம் தேதி குறைதீா் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

கடம்பத்தூா் நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணி நாள்:21.6.2025-சனிக்கிழமை மின்தடை பகுதிகள்: கடம்பத்தூா், பிரியாங்குப்பம், புதுமாவிலங்கை,எம்.ஜி.ஆா் நகா், ஸ்ரீதேவிகுப்பம், செஞ்சி, பாணம்பாக்கம், மணவூா், ஆட்டுப... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

திருநின்றவூா் நாள்: 20.6.2025- வெள்ளிக்கிழமை. நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: நெமிலிச்சேரி, பிரகாஷ் நகா், பாலாஜி நகா், நடுகுத்தகை, சி.டி.எச். ரோடு, இந்திரா நகா், ராஜாங்குப்பம், கொசவன... மேலும் பார்க்க