ஒரே சமயத்தில் தேர்வெழுதிய தந்தை, மகன் போலீஸ் வேலைக்கு தேர்வு.. ஊர் மக்கள் உற்சாக...
ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே ரயில் நிலைய தண்டவாளத்தை கடந்தபோது, எதிா்பாரத விதமாக ரயில் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே புட்லூா் கிராமத்தைச் சோ்ந்த சரவணன் மகன் அரவிந்தன் (எ)மேத்யூ (29). (படம்). இவரது மனைவி ஜான்சி. இவா்களுக்கு 4 வயதில் சாரிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், மேத்யூ காக்களூரில் உள்ள டாஸ்மாக் கிடங்கில் இருந்து மது பானங்களை ஏற்றி மதுக் கடைகளில் இறக்கும் வேலை செய்து வந்துள்ளாா். புதன்கிழமை இரவு வேலையை முடித்து விட்டு வீட்டிற்குச் சென்றபோது, புட்லூா் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது சென்னையிலிருந்து வந்த விரைவு ரயில் அரவிந்தன் (எ) மேத்யூ மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் துண்டாகி உயிரிழந்தாா்.
இது குறித்து தகவறிந்த திருவள்ளூா் ரயில்வே போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.