தேனிலவு கொலை: சோனத்திடம் ராஜா ரகுவன்ஷி தாய் எழுப்பும் 4 கேள்விகள்!
அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்! - இஸ்ரேல், ஈரானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேல் மற்றும் ஈரானின் ஆதரவு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இஸ்ரேல் - ஈரான் போர் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்,
"இரு நாடுகளுக்கு இடையேயான போர் என்பது யாராலும் கட்டுப்படுத்த முடியாத தீயைப் பற்ற வைக்கும். அதை நாம் பரவ விடக் கூடாது. அமைதியை ஏற்படுத்த ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
போரை நிறுத்துவது அந்தந்த நாடுகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த எதிர்காலத்துக்கு உதவும். போர் மேலும் மேலும் அதிகமாக நாம் அனுமதிக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.
முன்னதாக நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இஸ்ரேல், ஈரான் நாட்டின் பிரதிநிதிகள் தங்களுடைய குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் என்று இஸ்ரேல் கூறிய நிலையில், குற்றங்களுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்றால் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்போம் என ஈரான் கூறியுள்ளது.