செய்திகள் :

அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்! - இஸ்ரேல், ஈரானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்

post image

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேல் மற்றும் ஈரானின் ஆதரவு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இஸ்ரேல் - ஈரான் போர் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்,

"இரு நாடுகளுக்கு இடையேயான போர் என்பது யாராலும் கட்டுப்படுத்த முடியாத தீயைப் பற்ற வைக்கும். அதை நாம் பரவ விடக் கூடாது. அமைதியை ஏற்படுத்த ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

போரை நிறுத்துவது அந்தந்த நாடுகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த எதிர்காலத்துக்கு உதவும். போர் மேலும் மேலும் அதிகமாக நாம் அனுமதிக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.

முன்னதாக நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இஸ்ரேல், ஈரான் நாட்டின் பிரதிநிதிகள் தங்களுடைய குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் என்று இஸ்ரேல் கூறிய நிலையில், குற்றங்களுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்றால் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்போம் என ஈரான் கூறியுள்ளது.

அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு - பாகிஸ்தான் அரசு பரிந்துரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு 2026 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதற்கு பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான போர... மேலும் பார்க்க

எனக்கு 4 அல்லது 5 முறை நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும்! - டிரம்ப் ஆதங்கம்

அமைதிக்கான நோபல் பரிசை தான் 4 அல்லது 5 முறை பெற்றிருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு சந்தர்ப்பங்கள... மேலும் பார்க்க

காஸாவில் மேலும் 50 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் உணவுப் பொருள்களுக்காக காத்திருந்தவா்கள் உள்பட சுமாா் 50 போ் உயிரிழந்தனா். மத்திய காஸாவின் நெட்ஸாரிம் பகுதிக்கு அருகே நிவாரணப் பொருள்களை வாங்குவதற்க... மேலும் பார்க்க

நைஜா்: 34 ராணுவ வீரா்கள் சுட்டுக் கொலை

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஆயுதக் கும்பல் நடத்திய தாக்குதலில் 34 வீரா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதா... மேலும் பார்க்க

கருணைக் கொலை: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்

குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்ட மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற கீழவையி... மேலும் பார்க்க

இரண்டாவது வாரத்தில் இஸ்ரேல் - ஈரான் போா்

இஸ்ரேல் மீது ஈரான் வெள்ளிக்கிழமையும் சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்துவைத்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் அவசரகால மீட்புக... மேலும் பார்க்க