செய்திகள் :

ராகுல் பிறந்தநாள்! காங்கிரஸ் முன்னெடுப்பால் 8,500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

post image

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி, நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் 3,500 பேருக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 55-ஆவது பிறந்தநாளையொட்டி, தில்லியில் காங்கிரஸ் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், 170-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.

மேலும், வேலைவாய்ப்புகளைப் பெற, 8,500 பேர் பதிவு செய்ததாகவும், அவர்களில் 7,500 பேர் முகாமில் பங்கேற்றதாகவும் காங்கிரஸ் தெரிவித்தது.

அதுமட்டுமின்றி, பங்கேற்றவர்களில் 3,500 பேருக்கு முகாமிலேயே நியமனக் கடிதமும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம்கட்ட சுற்று நேர்காணலுக்கும் பலர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் நடத்திய வேலைவாய்ப்பு முகாம்

நாட்டில் வேலைவாய்ப்பின்மை குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பேசுகையில், இந்த நிகழ்வு, ஒரு தேர்தல் பேரணியோ மதக் கூட்டமோ அல்ல. இது வேலைதேடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கூட்டம்.

வேலைவாய்ப்பின்மை மீதான இளைஞர்களின் விரக்திக்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை வழங்குவதாக அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்ற பாஜக தவறிவிட்டது.

முகாமில் பங்கேற்றவர்கள், எந்தவொரு அரசியல் கட்சியுடனும் சேர்ந்தவர்கள் அல்ல; அவர்கள் படித்தவர்கள், ஆனால் வேலைவாய்ப்பின்றி இருக்கிறார்கள்.

இவர்களில் பலருக்கும், கடந்த 11 ஆண்டுகளில் நடத்தப்படும் முதல் வேலைவாய்ப்பாகக் கூட இருக்கும். நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால், இந்த வேலைவாய்ப்பு முகாமில் அரசு வேலைகளும் கிடைக்கப் பெறலாம் என்று கூறினர்.

இதையும் படிக்க:கலப்புத் திருமணம் செய்த பெண்ணால் 40 பேர் மொட்டை! பரிகாரமா? மூடநம்பிக்கையா?

புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.2.3 கோடி பரிசுத் தொகையுடன் போட்டி: மத்திய அரசு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ரூ.2.3 கோடி மதிப்பிலான பரிசுகளுடன் கூடிய புத்தாக்க நிறுவனங்களுக்கான போட்டியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தப் ... மேலும் பார்க்க

பிகாரில் பிரதமரின் பேரணிகளுக்கு ரூ.20,000 கோடி செலவு: தேஜஸ்வி குற்றச்சாட்டு!

பிகாரில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய பேரணிகளுக்கு இதுவரை ரூ.20 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறியதாவது, 2014 முதல... மேலும் பார்க்க

ரூ.80க்கு ஜியோ அறிமுகம் செய்த சூப்பர் ரீசார்ஜ் பிளான்! ஆனால்?

11 மாதங்களுக்கு ரூ.895 செலுத்தி ரீசார்ஜ் செய்யும் புதிய திட்டத்தை ஜியோ நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. டேட்டா அதிகம் தேவையில்லை. அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றால், ஜியோ அற... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் கனமழையால் ஒடிசாவில் வெள்ளம்! 50,000 பேர் பாதிப்பு!

ஜார்க்கண்டில் பெய்து வரும் கனமழையால், ஒடிசா மாநிலத்திலுள்ள ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஒடிசாவின் சுப... மேலும் பார்க்க

இந்தியாவில் 295 பெட்டிகள், 6 என்ஜின்களுடன் இயக்கப்படும் மிக நீண்ட ரயில்! உண்மையா?

295 பெட்டிகளுடனும், 6 என்ஜின்களுடனும் இந்திய ரயில்வே ஒரு ரயிலை இயக்கி வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? நாட்டிலேயே மிக நீண்ட ரயில் என்ற பெருமையை இந்த ரயில் பிடித்திருக்கிறது. இதன் பெயர் சூப்பர் வாசுகி.... மேலும் பார்க்க

தீர்வு காண்பதில் அல்ல, வெற்று முழக்கங்களின் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளார் மோடி: ராகுல்

பிரதமர் நரேந்திர மோடி முழக்கங்களின் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளாரே தவிர தீர்வு காண்பதில் அல்ல என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவ... மேலும் பார்க்க