செய்திகள் :

ஜார்க்கண்ட் கனமழையால் ஒடிசாவில் வெள்ளம்! 50,000 பேர் பாதிப்பு!

post image

ஜார்க்கண்டில் பெய்து வரும் கனமழையால், ஒடிசா மாநிலத்திலுள்ள ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஒடிசாவின் சுபர்நரேகா ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பாலாசோர் மாவட்டத்திலுள்ள ஏராளமான கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவைப்பட்டால் அருகிலுள்ள நிவாரண முகாம்களுக்குச் செல்ல தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாலாசோர் மாவட்ட ஆட்சியர் சூரியவன்ஷி மயூர் விகாஸ், அம்மாவட்டத்தின் தாசில்தார்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அவசரகாலத்தில் மக்களை வெளியேற்ற தயார்நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தேவையான மருத்துவ வசதிகளையும் சேகரித்து வைக்குமாறும், சாந்தில் அணையின் நீர்மட்டத்தைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்துடன், ஜார்க்கண்டில் தற்போது மழையின் அளவு குறைந்து வருவதால், ஆற்றின் வெள்ளம் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஜார்க்கண்டின் சாந்தில் அணை நிரம்பி திடீரென தண்ணீர் திறக்கப்பட்டதாலே, பாலாசோரின் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: இந்தியாவில் 295 பெட்டிகள், 6 என்ஜின்களுடன் இயக்கப்படும் மிக நீண்ட ரயில்! உண்மையா?

மகாராஷ்டிரத்தில் முக்கிய நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை: முதல்வர் ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தில் ஆலந்தி நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.புணே மாவட்டத்தில் உள்ள ஆலந்தியில் உள்ள பிரசித்திபெற்ற தியானேஷ்வரர் கோவிலி... மேலும் பார்க்க

திருப்பதியில் தீ விபத்து!

திருப்பதி கோவில் வளாகத்தில் இன்று(ஜூன் 21) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திருப்பதியில் கடந்த சில நாள்களாக வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் காணப்பட்ட நிலையில், சுமார் 24 மணிநேரம் வரை ப... மேலும் பார்க்க

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது: ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம்!

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டு ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார். சா்வதேச யோகா தினம் இன்று(ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர பிரதேசத்த... மேலும் பார்க்க

அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்கும்: ஐசிஎம்ஆர் புது முயற்சி!

அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்க ஏதுவாக ஐசிஎம்ஆர் புது முயற்சியை எடுத்துள்ளது. ஐசிஎம்ஆர் கீழ் செயல்படும் மும்பையில் உள்ள தேசிய இம்யூனோ ஹீமெடாலஜி நிறுவனம், நாட்டிலேயே முதல்முறையாக ‘அரிய வகை இரத்தப் ப... மேலும் பார்க்க

ஓய்வூதியம் பற்றி நல்ல செய்தியைத் தெரிவித்த நிதிஷ் குமார்!

பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளார் அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார். பிகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையி... மேலும் பார்க்க

புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.2.3 கோடி பரிசுத் தொகையுடன் போட்டி: மத்திய அரசு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ரூ.2.3 கோடி மதிப்பிலான பரிசுகளுடன் கூடிய புத்தாக்க நிறுவனங்களுக்கான போட்டியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தப் ... மேலும் பார்க்க