செய்திகள் :

அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்கும்: ஐசிஎம்ஆர் புது முயற்சி!

post image

அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்க ஏதுவாக ஐசிஎம்ஆர் புது முயற்சியை எடுத்துள்ளது.

ஐசிஎம்ஆர் கீழ் செயல்படும் மும்பையில் உள்ள தேசிய இம்யூனோ ஹீமெடாலஜி நிறுவனம், நாட்டிலேயே முதல்முறையாக ‘அரிய வகை இரத்தப் பதிவேடு’ முறையை தொடங்கியுள்ளது.

இதன்மூலம், பரவலான மக்களிடம் இருக்கும் இரத்த வகைகளைச் சாராதவர்கள் நோய்வாய்ப்பட்டு iரத்தம் தேவைப்படும்போது, தாங்கள் சார்ந்துள்ள அரிய வகை இரத்த வகைகளை எளிதில் பெற்றுக்கொள்ளலாம். அரிய வகை இரத்தம் உள்ளவர்களை தொடர்புகொள்ள வசதியாக இந்த பதிவேடு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த பதிவேடானது, குறிப்பிட்ட சில ரத்த வகைகளைச் சார்ந்த மக்களுக்கு பெரும் பயனளிக்கும் என்று ஐசிஎம்ஆர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இரத்தம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள இ-ரக்தகோஷ் என்ற மத்திய அரசின் தளம் செயல்பட்டு வருகிறது. எந்தெந்த இடங்களில் இரத்த தானம் செய்வோர் இருக்கின்றனர். இரத்த வங்கிகள் செயல்படும் இடங்கள் ஆகியன பற்றிய விவரங்களின் குறிப்பே இந்த இ-ரத்தகோஷ் தளம்.

இந்தநிலையில், இ-ரக்தகோஷ் தளத்துடன் இந்த புதிய பதிவேட்டினையும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை சுகாதார சேவைகள் துறையின் பொது இயக்குநரகத்துடன் நடைபெற்று வருகிறது என்றும் ஐசிஎம்ஆர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

அகமதாபாத் விமான விபத்து: 247 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 247 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.இதுகுறித்து அகமதாபாத் சிவில் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் முக்கிய நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை: முதல்வர் ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தில் ஆலந்தி நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.புணே மாவட்டத்தில் உள்ள ஆலந்தியில் உள்ள பிரசித்திபெற்ற தியானேஷ்வரர் கோவிலி... மேலும் பார்க்க

திருப்பதியில் தீ விபத்து!

திருப்பதி கோவில் வளாகத்தில் இன்று(ஜூன் 21) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திருப்பதியில் கடந்த சில நாள்களாக வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் காணப்பட்ட நிலையில், சுமார் 24 மணிநேரம் வரை ப... மேலும் பார்க்க

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது: ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம்!

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டு ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார். சா்வதேச யோகா தினம் இன்று(ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர பிரதேசத்த... மேலும் பார்க்க

ஓய்வூதியம் பற்றி நல்ல செய்தியைத் தெரிவித்த நிதிஷ் குமார்!

பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளார் அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார். பிகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையி... மேலும் பார்க்க

புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.2.3 கோடி பரிசுத் தொகையுடன் போட்டி: மத்திய அரசு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ரூ.2.3 கோடி மதிப்பிலான பரிசுகளுடன் கூடிய புத்தாக்க நிறுவனங்களுக்கான போட்டியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தப் ... மேலும் பார்க்க