செய்திகள் :

அகமதாபாத் விமான விபத்து: 247 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

post image

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 247 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து அகமதாபாத் சிவில் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ் ஜோஷி கூறுகையில், சனிக்கிழமை மாலை வரை, 247 டிஎன்ஏ மாதிரிகள் பொருந்தியுள்ளன. பலியானவர்களின் உறவினர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு இதுவரை 232 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. செயல்முறை தொடர்கிறது என்று தெரிவித்தார்.

அடையாளம் காணப்பட்ட 247 பேரில் 187 இந்தியர்கள், 52 பிரிட்டன், ஏழு போர்த்துகீசியா மற்றும் ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் என்று ஜோஷி கூறினார். 187 இந்தியர்களில், மொத்தம் 175 பேர் துரதிர்ஷ்டவசமான விமானத்தில் இருந்ததாகவும், அவர்கள் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், டையூ மற்றும் நாகாலாந்து பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் மேலும தெரிவித்தார்.

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர, மீதமுள்ள 241 பேர் உள்பட 270 பேர் பலியாகினர்.

பெரும்பாலான உடல்கல் தீயில் எரிந்து நாசமாகியிருக்கும் நிலையில், உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகளுடன் சடலங்கலை உறுதி செய்யும் பணி நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரத்தில் முக்கிய நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை: முதல்வர் ஃபட்னவீஸ்

3 அதிகாரிகள் பணிநீக்கம்: ஏா் இந்தியாவுக்கு டிஜிசிஏ உத்தரவு

மண்டல துணைத் தலைவா் உள்பட 3 அதிகாரிகளை அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் பணிநீக்கம் செய்ய டாடா குழுத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

ஏற்றுமதியில் ரூ.100 கோடி ஜிஎஸ்டி மோசடி: 7 இடங்களில் சிபிஐ சோதனை!

ஜிஎஸ்டி முறைகேட்டில் ஈடுபட்டு அதன்மூலம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் 7 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.ஜார்க்கண்ட், பிகார் ஆகிய மாநிலங்களிலிருந்து கடந்த 2022 - 23 காலகட்... மேலும் பார்க்க

தேனிலவு கொலை: மனைவி உள்பட 2 பேருக்கு 13 நாள் நீதிமன்றக் காவல்!

மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது கணவரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மனைவிக்கு 13 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதியினர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் முக்கிய நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை: முதல்வர் ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தில் ஆலந்தி நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.புணே மாவட்டத்தில் உள்ள ஆலந்தியில் உள்ள பிரசித்திபெற்ற தியானேஷ்வரர் கோவிலி... மேலும் பார்க்க

திருப்பதியில் தீ விபத்து!

திருப்பதி கோவில் வளாகத்தில் இன்று(ஜூன் 21) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திருப்பதியில் கடந்த சில நாள்களாக வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் காணப்பட்ட நிலையில், சுமார் 24 மணிநேரம் வரை ப... மேலும் பார்க்க

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது: ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம்!

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டு ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார். சா்வதேச யோகா தினம் இன்று(ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர பிரதேசத்த... மேலும் பார்க்க