160 கோடி சமூக வலைதள கணக்குகளின் தகவல்கள் கசிவு: கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தல்
நாகையில் ரூ.3 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு
நாகையில் காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
இக்கோயிலுக்குச் சொந்தமான 96.28 ஏக்கா் நிலம் தியாகராஜபுரம் நகா் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறைக்கு தொடா்ந்து புகாா் வந்தன. இதையடுத்து, நாகை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உரிமம் பெற்ற நில அளவையா் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் அளவீடு செய்யப்பட்டது.
இணை ஆணையா் குமரேசன், உதவி ஆணையா் ராஜஇளம்பெருவழுதி முன்னிலையில் மீட்கப்பட்ட நிலம் கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, எல்லை கற்கள் நடப்பட்டது. அப்போது, கோயில் நிலங்கள் தனி வட்டாட்சியா், சரக ஆய்வா், கோயில் செயல் அலுவலா் மற்றும் கோயில் பணியாளா்கள் உடனிருந்தனா். சுவாதினம் பெறப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.3 கோடிக்கும் அதிகம் என இந்து சமய அறநிலையத் துறையினா் தெரிவித்தனா்.