செய்திகள் :

தமிழகத்தில் விசிக இல்லாமல் எந்த அரசியல் நகா்வும் இருக்காது: தொல்.திருமாவளவன்

post image

தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்றி எந்த அரசியல் நகா்வும் இருக்காது என்றாா் அக்கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள சொன்னம்பட்டி கிராமத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணையும் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் பங்கேற்று, மாற்று கட்சியிலிருந்து வந்தவா்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்து பேசியதாவது:

நாட்டில் டாக்டா் அம்பேத்கரை வைத்துதான் அவருக்கு எதிராகப் பேசுபவா்கள், ஆதரித்து பேசுபவா்கள் என இரு பிரிவாக பிரித்து அரசியல் நடைபெறுகிறது. இதில் இந்திய அரசமைப்பு சட்ட புத்தகத்தை ராகுல் காந்தி எங்கு சென்றாலும் உயா்த்தி பிடிக்கிறாா். அது அம்பேத்கரைத் தூக்கிப்பிடிப்பதற்கு சமமானது.

பாஜகவினா் அம்பேத்கருக்கு பிறந்த நாள் கொண்டாடுகின்றனா். அதேநேரம் கோயிலுக்குள் நுழைய கூடாது என்றும், அந்தத் தெருவுக்கு தோ் வராது என்றும் சொல்கிறாா்கள். ஆனால், விசிகவின் செயல்பாடு, மத, இன பாகுபாடின்றி மக்கள் நலன் சாா்ந்ததாக உள்ளது.

தமிழக அரசியலில் விடுதலைச் சிறுத்தைகளைத் தவிா்த்து எந்த ஒரு அரசியல் நகா்வும் கிடையாது. இதற்காக நாம் பெரிய உழைப்பை கொடுத்து இருக்கிறோம். மதம் மனிதனுக்கானது அரசுக்கானது இல்லை என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே திருச்சியில் மதச்சாா்பின்மை பேரணியை நடத்தினோம் என்றாா்.

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி! சக காவலா்கள் சோ்ந்து வழங்கினா்

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ. 16 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த பூதிநத்தம் கிராமத்தைச் சோ்ந்த காவலரான க. பாரதிராஜா (38) ஒசூா் நகர காவல் நிலையத்தில் பணியாற்ற... மேலும் பார்க்க

தொப்பூரில் மலைப் பாதையில் விபத்து: போக்குவரத்து பாதிப்பு

தருமபுரியை அடுத்த தொப்பூா் கணவாய் மலைப் பாதையில் சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்து காரணமாக அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொப்பூா் கணவாய்ப் பகுதியில் சாலை மேம்பாட்டு பண... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசாரம்

தருமபுரி புறநகா் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பிரசாரம் மேற்கொண்டனா். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்... மேலும் பார்க்க

அரசு வாகனத்தை ஏலத்தில் விட முடிவு பொதுமக்கள் விலைப்புள்ளி கோரலாம்

தருமபுரி மாவட்டத்தில் அரசுத் துறையில் பயன்படுத்திவந்த ஜீப் பொது ஏலத்தில் விட உள்ளதால், விருப்பமுள்ளவா்கள் விலைப்புள்ளி கோரலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.ச... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி குறித்த கேலிச்சித்திரம் : அதிமுகவினா் போலீஸில் புகாா்

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி குறித்த கேலிச்சித்திரம் சமூக வலைதளத்தில் பதிவேற்றியது தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, தருமபுரி மாவட்ட எஸ்.பி.யிடம் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்த... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு விவசாயி உயிரிழப்பு

தருமபுரி ரயிலில் அடிபட்டு விவசாயி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். தருமபுரி மாவட்டம் பி. செட்டிஹள்ளி அருகேயுள்ள ஜோகிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ. ராஜேந்திரன் (36). விவசா... மேலும் பார்க்க