தீயசக்திகளை எதிர்த்து துணை நிற்க விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
விரிவாக்கப்பட்ட சிற்றுந்து திட்டத்தால் 1 கோடி மக்கள் பயன்: தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் 3,103 வழித் தடங்களில் இயக்கப்படும் சிற்றுந்துகளால், 1 கோடி மக்கள் பயன்பெறுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பேருந்து வசதிகள் கிடைக்காத குக்கிராமப் பகுதி மக்களுக்கும் பேருந்து வசதி கிடைக்க சிற்றுந்து திட்டம் 1997-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதை விரிவுபடுத்தும் வகையில், புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டப்படி 25 கி.மீ. தொலைவுக்கு சிற்றுந்துகள் இயக்கப்படும் எனவும், முக்கிய அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்குச் சென்று பொது மக்களை இறக்கிடவிட ஏதுவாக மேலும் 1 கி.மீ. தொலவை வரை சிற்றுந்துகளை இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 3,103 வழித்தடங்களில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் 1 கோடி மக்கள் பயன்பெறத்தக்க வகையில் சிற்றுந்து திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.