செய்திகள் :

விரிவாக்கப்பட்ட சிற்றுந்து திட்டத்தால் 1 கோடி மக்கள் பயன்: தமிழக அரசு தகவல்

post image

தமிழகத்தில் 3,103 வழித் தடங்களில் இயக்கப்படும் சிற்றுந்துகளால், 1 கோடி மக்கள் பயன்பெறுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பேருந்து வசதிகள் கிடைக்காத குக்கிராமப் பகுதி மக்களுக்கும் பேருந்து வசதி கிடைக்க சிற்றுந்து திட்டம் 1997-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதை விரிவுபடுத்தும் வகையில், புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டப்படி 25 கி.மீ. தொலைவுக்கு சிற்றுந்துகள் இயக்கப்படும் எனவும், முக்கிய அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்குச் சென்று பொது மக்களை இறக்கிடவிட ஏதுவாக மேலும் 1 கி.மீ. தொலவை வரை சிற்றுந்துகளை இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 3,103 வழித்தடங்களில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் 1 கோடி மக்கள் பயன்பெறத்தக்க வகையில் சிற்றுந்து திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயசக்திகளை எதிர்த்து துணை நிற்க விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பிறந்த நாளுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகி... மேலும் பார்க்க

திரைத்துறையில் உச்சம் தொட்ட விஜய்: சீமான் வாழ்த்து

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பிறந்த நாளுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடி வர... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்கள் கீழடிக்கு விரைவில் கல்விச் சுற்றுலா: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் கல்விச் சுற்றுலாவாக கீழடி உள்ளிட்ட பல்வேறு அகழ்வாராய்ச்சி இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறினாா். பள்ளிக் கல்வித... மேலும் பார்க்க

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் நியமனம்: ஜூலை 1 முதல் விண்ணப்பம்! முதல்வா் மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமனப் பதவி அளிப்பதற்கான விண்ணப்ப நடைமுறைகள் ஜூலை 1-இல் தொடங்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். உள்ளாட்சி அமைப்புகளில் நியமனப் பதவிகளை வழங்க... மேலும் பார்க்க

பண முறைகேடு வழக்கு: பொன்முடி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு

பண முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து முன்னாள் அமைச்சா் க.பொன்முடிக்கு விலக்கு அளித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் கடந்த 2006 - 2011- ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி... மேலும் பார்க்க

அரசு சித்த மருத்துவமனையில் விரைவில் செயற்கை கருத்தரித்தல் மையம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசு சித்த மருத்துவமனையில் விரைவில் செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்... மேலும் பார்க்க