செய்திகள் :

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்! மூன்றாம் உலகப் போரின் தொடக்கமா? உலக நாடுகள் பதற்றம்!

post image

ஈரான் மீதான அமெரிக்காவின் வான்வெளித் தாக்குதலால், உலகப் போர் ஆரம்பமாகி விட்டதாக உலக நாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நிலவி வருகிறது. இந்தப் போரில், இஸ்ரேலுக்கு ஜி7 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. மேலும், தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அமெரிக்காவும், தற்போது ஈரான் மீது தாக்குதல் நடத்தியது உலக நாடுகளிடையே அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி நிலையங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் (Truth Social), ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய 3 அணுசக்தி தளங்கள் மீதான எங்களது வெற்றிகரமான தாக்குதலை நாங்கள் முடித்துவிட்டோம். எங்களின் அனைத்து விமானங்களும் இப்போது ஈரான் வான்வெளியைவிட்டு வெளியேறி விட்டன.

எங்களின் அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக அமெரிக்காவுக்கே திரும்பி விட்டன. அமெரிக்காவின் சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துகள். தாக்குதலின்போது கவனம் செலுத்திய வீரர்களுக்கு நன்றி. உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்ததில்லை.

இது அமெரிக்கா, இஸ்ரேல் மட்டுமின்றி, உலகுக்கும் ஒரு வரலாற்றுத் தருணம். ஈரான் இப்போது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும். இது அமைதிக்கான நேரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலால், தற்போது ரஷியா உள்பட ஈரான் ஆதரவு நாடுகளும் மத்திய கிழக்கு நாடுகளும் போரில் ஈடுபட அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால், உலக நாடுகளிடையே போர்ப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

மேலும், இந்தத் தாக்குதல் குறித்து, மக்களிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று பேசவுள்ளார்.

இதையும் படிக்க:இஸ்ரேல் - ஈரான் போா்: ரஷியாவுக்கு பலனா? பாதகமா?

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: வான்வெளியை மூடிய இஸ்ரேல்!

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேல் தனது வான்வெளியை மூடியுள்ளது.இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நிலவி வரும் நிலையில... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா! ஐ.நா. கவலை!

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்துள்ளது.இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டரெஸ் கவலை ... மேலும் பார்க்க

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் விளைவு! சர்வதேச கப்பல்களைத் தாக்கும் ஹவுதி!

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்காவின் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.யேமன் நாட்டில் உள்ள (ஈரான் ஆதரவு பெற்ற) ஹவுத... மேலும் பார்க்க

அமைதி அல்லது அழிவு ஏற்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமைதி ஏற்படும் அல்லது அழிவு ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே ஒரு வாரத்துக்க... மேலும் பார்க்க

அமெரிக்கா தொடங்கிய போரை ஈரான் முடித்து வைக்கும்!

அமெரிக்கா தொடங்கிய போரை முடித்து வைப்பதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கா, பயங்கரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு அளிப்பதாகக் கூறி, ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது சனிக்... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போா்: ரஷியாவுக்கு பலனா? பாதகமா?

ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற நிழல் ராணுவத்தினா் மூலம் ஈரானும், ரகசிய நடவடிக்கைகள் மூலம் இஸ்ரேலும் பல ஆண்டுகளாக நடத்திவந்த நிழல் யுத்தம் தற்போது நேரடிப் போராக வெடித்திருக்கிறது. இரண்டாவது வாரத்தில் அடியெடுத... மேலும் பார்க்க