செய்திகள் :

குஜராத்: புல்லட் மீது தீராத காதல்... விபத்தில் இறந்த வாலிபரின் உடலுடன் புல்லட்டும் சேர்த்து அடக்கம்

post image

குஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தில் உள்ள உத்தர்சந்தா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் பார்மர்(18). இவருக்கு ராயல் எல்பீல்டு புல்லட் பைக் என்றால் மிகவும் பிடிக்கும்.

எங்குச் சென்றாலும் அவர் தனது புல்லட்டில்தான் பயணம் செய்வார். பார்மர் தனது புல்லட்டில் சென்று கொண்டிருந்தபோது கிராமத்திற்கு வெளியில் டிராக்டர் ஒன்றின் மீது புல்லட் மோதிக்கொண்டது.

இதில் பார்மர் படுகாயம் அடைந்தார். அவரை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். 12 நாட்கள் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார்.

இதையடுத்து அவரது உறவினர்கள் பார்மர் உடலை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.

பார்மருக்கு புல்லட் மீது தீராத மோகம் இருந்தது. இதையடுத்து பார்மர் உடலுடன் அவர் பயன்படுத்திய புல்லட்டையும் சேர்த்துப் புதைக்க முடிவு செய்தனர்.

அதற்குத் தக்கபடி குழி தோண்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து உறவினர்கள், ஊர் மக்கள் சூழ பார்மர் உடலுடன் புல்லட்டையும் குழிக்குள் இறக்கி மண்ணைப் போட்டு மூடிவிட்டனர். புல்லட் மட்டுமல்லாது அவர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் அவருடன் சேர்த்துப் புதைத்தனர்.

இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி இருக்கிறது. இது குறித்து பார்மர் தந்தை சஞ்சய் கூறுகையில், ''பார்மருக்கு எல்லாமே அவன் பயன்படுத்திய புல்லட்தான். எனவேதான் அவனது ஆத்மா சாந்தியடைய அவன் பயன்படுத்திய புல்லட்டையும் சேர்த்துப் புதைக்க முடிவு செய்தோம்.

புதைக்கப்படும் புல்லட்
புதைக்கப்படும் புல்லட்

தான் இறந்தாலும் பைக் தன்னுடன் இருக்கவேண்டும் என்று விரும்பினான்''என்றார்.

கிரிஷ் பார்மர் சமீபத்தில்தான் 12வது வகுப்பு படித்து முடித்தார். அட்மிஷன் தொடர்பாக கல்லூரியில் விண்ணப்பித்துவிட்டு இரவில் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது டிராக்டர் மீது புல்லட் மோதியது. கிரிஷ் குடும்பத்தில் காரும் இருக்கிறது. ஆனால் புல்லட்டைத்தான் எப்போது கிரிஷ் ஓட்டுவது வழக்கம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

நடுவானில் மோசமான உடல்நிலை; சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது வழக்கு தொடர்ந்த மருத்துவர் - என்ன நடந்தது?

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் மருத்துவர், விமானத்தில் பயணித்தபோது உணவு ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது வழக்குப்பதிவு தொடர்ந்துள்ளார்.தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியின் படி, நியூயா... மேலும் பார்க்க

டெல்லி: மெட்ரோ ரயிலில் பாம்பு இருந்ததாக அலறிய பெண்களின் வீடியோ வைரல்; DMRC-யின் விளக்கம் என்ன?

டெல்லி மெட்ரோவின் பெண்கள் ரயில் பெட்டிக்குள் ஒரு பாம்பு வந்ததாகவும் அதனை கண்டு பயணிகள் அலறியடித்து சத்தம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.மெட்ரோ ரயில் பலரும் பயன்படுத்தக்கூடிய ஒரு போக்குவரத்தா... மேலும் பார்க்க

2006-ல் நிலத்தை விற்ற தந்தை; நில உரிமையாளரிடம் 19 ஆண்டுபின் இழப்பீடு கோரும் மகள் - என்ன நடந்தது?

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் 2006 ஆம் ஆண்டு தனது நிலத்தை ஒருவருக்கு பெற்றுள்ளார். விற்றவரின் மகள் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இரண்டு தசாப்தங்களுக்கு ம... மேலும் பார்க்க

மகனுக்கு பெண்பார்க்க சென்றபோது நெருக்கம் - வருங்கால மருமகளை திருமணம் செய்த 6 குழந்தைகளின் தந்தை

உத்தரப்பிரதேச மாநிலத்தில், தனது மகனுக்கு பார்த்த பெண்ணை தானே ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ராம்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சகீல். இவருக்கு திருமணமாகி 6 பிள்ளைகள் இருக்க... மேலும் பார்க்க

2025 -1941: ஒரே நாள்காட்டியை கொண்டிருக்கும் ஆண்டுகள்- உலகப்போர் நடந்த ஆண்டை எவ்வாறு பிரதிபலிக்கிறது?

2025 ஆம் ஆண்டின் நாள்காட்டி 1941 ஆம் ஆண்டின் நாள்காட்டியோடு அப்படியே ஒத்து இருக்கிறது. அதாவது இரண்டு ஆண்டுகளிலும் தேதிகள், கிழமைகள் ஒன்றாகவே வருகின்றன. 2025 ஆம் ஆண்டு நாள்காட்டி 1941 ஆம் ஆண்டு போலவே உ... மேலும் பார்க்க

Euro Millions: இதுவரை யாரும் பெறாத லாட்டரி ஜாக்பாட்டை வென்ற நபர்; எத்தனை கோடிக்கு அதிபதி தெரியுமா?

அயர்லாந்தை சேர்ந்த ஒருவர் 208 மில்லியன் பவுண்டுகள் (தோராயமாக ரூபாய் 2,120 கோடி) லாட்டரி டிக்கெட்டில் வென்றுள்ளார். இது ஐரோப்பாவில் இதுவரை வென்ற மிகப்பெரிய லாட்டரி பரிசாக கூறப்படுகிறது. ஐரிஷ் என்ற நபர்... மேலும் பார்க்க