செய்திகள் :

மத்திய கிழக்கில் பதற்றம்! அமெரிக்காவுக்கு பிரிட்டன் ஆதரவு!

post image

மத்திய கிழக்கில் நிலவி வரும் நெருக்கடியான சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஈரானுக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கிய நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ரஷியா உள்ளிட்ட நாடுகள் களமிறங்கும் சூழலும் ஏற்படலாம்.

இந்த நிலையில், ஈரானின் அணுசக்தி ஆயுதத்துக்கு பிரிட்டன் பிரதமரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைத்த பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ``ஈரானின் அணுசக்தி திட்டமானது, சர்வதேச பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அந்த அச்சுறுத்தலைத் தணிக்கவே அமெரிக்காவும் தாக்குதல் நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளது.

மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியின்மையும் போர்ப் பதற்றமும் நிலவி வருகிறது. ஆகையால், ஈரான் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டு, இந்த நெருக்கடியான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஒரு ராஜதந்திர தீர்வையும் மேற்கொள்ள வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை ஈரான் ஆதரிப்பதாகக் கூறி, ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலால், உலக நாடுகளிடையே போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, மீண்டும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதையும் படிக்க:அமெரிக்கா தொடங்கிய போரை ஈரான் முடித்து வைக்கும்!

முன்பே வெளியேறிவிட்டோம்: அமெரிக்க தாக்குதல் குறித்து ஈரான்!

அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்க நடத்திய தாக்குதலுக்கு முன்னரே நாங்கள் பாதுகாப்பாக வெளியேறிவிட்டோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே 8 நாள்களுக்கு மேலாக போர் நிலவி வர... மேலும் பார்க்க

பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்ததில் 8 பேர் பலி

பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் தெற்கு மாநிலமான சாண்டா கத்தரினாவில் 21 பேரை ஏற்றிச் சென்ற சுற்றுலா ஹாட் பலூன் சன... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்கு பதிலடி! இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்!

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தகவல் தெரியவந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்ததில் சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் ஞாயிற்றுக்கிழமை படகு கவிழ்ந்ததில் 7 சுற்றுலாப் பயணிகள் பலியானார்கள்.ஸ்வாட் மாவட்டத்தின் கலாம் ஷாஹி பாக் பகுதியில் 10 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: வான்வெளியை மூடிய இஸ்ரேல்!

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேல் தனது வான்வெளியை மூடியுள்ளது.இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நிலவி வரும் நிலையில... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா! ஐ.நா. கவலை!

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்துள்ளது.இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டரெஸ் கவலை ... மேலும் பார்க்க