செய்திகள் :

நீலகிரி: பறிபோன மனித உயிர்கள்; கும்கிகளைக் களமிறக்கிய வனத்துறை; என்ன நடக்கிறது கூடலூரில்?

post image

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்தில் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முறையற்ற வளர்ச்சிப் பணிகளால் யானைகளின் வாழிடங்களும் வழித்தடங்களும் கடுமையான சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த யானை
உயிரிழந்த யானை

இதன் காரணமாகவே யானை - மனித எதிர்கொள்ளல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நிகழ்ந்து வருகின்றன.

கூடலூர் வனக்கோட்டத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 10 மனித உயிர்கள் பறிபோகும் துயரம் தொடர்ந்து வருகின்றன.

அதேவேளையில் மின்சாரம் பாய்ச்சியும், திறந்தவெளி குழிகளில் விழுந்தும் யானைகள் உயிரிழந்து வருகின்றன.

குடியிருப்பு மற்றும் விளைநிலங்களில் நடமாடி வரும் யானைகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அதையும் மீறியும் எதிர்கொள்ளல்கள் நிகழ்ந்து வருகின்றன.

பந்தலூர் அருகில் உள்ள நெல்லியாளம் பகுதியைச் சேர்ந்த ஜோய் என்பவர் கடந்த 8-ம் தேதி யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து தேவர் சோலை பேபி நகர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரைக் கடந்த புதன்கிழமை இரவு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கும்கி யானை
கும்கி யானை

அடுத்தடுத்து இரண்டு மனித உயிர்கள் பறிபோனதைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யானைகளை குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிலிருந்து இரண்டு கும்கி யானைகளை கூடலூர் வனக்கோட்டத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது வனத்துறை.

இது குறித்துத் தெரிவித்த வனத்துறையினர், "மக்களின் கோரிக்கையை ஏற்று ஜம்பு, கிருஷ்ணா ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

பாட்டவயல் முதல் பிதர்காடு வரையிலான பகுதியில் யானைகளின் நடமாட்டம் குறித்துக் கண்காணித்து வருகிறோம்.

காப்பி தோட்டத்தில் யானை கூட்டம்
காப்பி தோட்டத்தில் யானை கூட்டம்

குடியிருப்புகள், காபி மற்றும் தேயிலைத் தோட்டங்களில் நடமாடி வரும் யானைக் கூட்டத்தை விரட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மக்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

யானைகள் நடமாட்டம் இருந்தால் வனத்துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் " என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம்: சட்டவிரோத கனிம வள திருட்டு? சாட்டிலைட் சர்வே துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில் சட்ட விரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக வனத்துறை அளித்த புகாரின் எதிர... மேலும் பார்க்க

அடர்ந்த காட்டு பகுதியில் முதலை முட்டை கூடுகள்; 24 மணிநேரமும் கண்காணிக்கும் வனத்துறையினர் - ஏன்?

ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் பாலிகாட் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதி அடர்ந்த, முட்கள் நிறைந்த காடுகள் மற்றும் கரடு முரடான பள்ளத்தாக்குகளுக்கு மத்தியில் உள்ளது. இந்த பாலிகாட் பகுதி தேசிய சம... மேலும் பார்க்க

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் காணப்பட்ட இந்திய குள்ளநரி - வனவிலங்கு நிபுணர்கள் சொல்வதென்ன?

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இந்திய குள்ளநரியைக் கண்டுள்ளனர். இந்த இனத்தை சதுப்பு நிலத்தில் முதன் முதலில் பார்த்ததாகவும் தெரிவிக்கின்றனர். சென்னை மாவட்ட வன அதிகாரி வி.ஏ சரவணன் இதனை உறுதிப்படுத... மேலும் பார்க்க

Thermal Imaging: இரவில் யானைகளைக் கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்; வனத்துறை முடிவுக்குக் காரணம் என்ன?

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம். மும்மாநிலங்களை இணைக்கும் முச்சந்திப்பு வனப்பகுதியில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதியில் யா... மேலும் பார்க்க

Survival: ஆண் தவளையுடன் இனச்சேர்க்கையைத் தவிர்க்கும் பெண் தவளைகள்; ஏன் தெரியுமா?

வாழ்வதற்காக இந்த பூமியில் இருக்கிற சின்னச்சின்ன உயிர்களும் செய்கிற தந்திரங்களைத் தெரிந்துகொண்டால் ஆச்சரியப்பட்டுப்போவோம். அந்தத் தந்திரங்களில் முக்கியமான ஒன்று இறந்ததுபோல நடிப்பது. அறிவியல் இதை தற்கால... மேலும் பார்க்க