"இந்திய சினிமாவின் முகத்தை மாற்றிய ஒரு ஐகானின் கொண்டாட்டம்" - ஜன நாயகன் குறித்து தயாரிப்பாளர்
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' படத்தின் படப்பிடிப்பு கடைசிக் கட்டத்தை எட்டிவிட்டது. விஜய்யும் பூஜா ஹெக்டேவும் தங்களுடைய காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டார்கள்.
விஜய்யின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு 'ஜன நாயகன்' படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள்.

அ. வினோத் இயக்கும் இப்படத்தை கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா.
தற்போது படத்தைப் பற்றி தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா 'பின்க்வில்லா' ஊடகத்திடம் பேசியிருக்கிறார்.
'ஜன நாயகன்' குறித்து அவர், "தளபதி விஜய்யுடன் அவரின் கடைசிப் படத்தில் பணிபுரிவது வெறும் மைல் கல்லாக மட்டுமல்ல, அதைத் தனிப்பட்ட பெருமையாகவும் கருதுகிறோம்.
நாங்களும் ரசிகர்களாக இருப்பதால், இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள பல ரசிகர்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பது எங்களுக்குத் தெரியும்.

'First Roar' என்பது நாங்கள் உருவாக்கி வரும் திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான பிரமாண்டப் படத்தின் ஒரு சிறு காட்சியாகும். தளபதியின் அசாதாரண சினிமா பயணத்திற்கு நியாயம் செய்யும் ஒரு படத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.
'ஜன நாயகன்' ஃபேர்வெல் மட்டும் கிடையாது, இந்திய சினிமாவின் முகத்தை மாற்றிய ஒரு ஐகானின் கொண்டாட்டமாகவும் இருக்கும்" எனக் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...