செய்திகள் :

கல்யாண வரமருளும் கங்கணப் பிராப்த பூஜை! நீங்கள் நினைத்த வரன் உடனே கிடைக்கும் அதிசயம்!

post image

சக்தி விகடன் வாசகர்களின் குறைகள் தீரவும் வளங்கள் சேரவும் வரும் ஆடி ஏகாதசி 20.7.25 நாளில் இங்கு கங்கணப் பிராப்த சங்கல்பப் பிரார்த்தனை நடத்தப்படவுள்ளது. திருமண வரமும் குடும்ப சுபீட்சமும் அருளும் பரிகார பூஜை.

கங்கணப் பிராப்த பூஜை
கங்கணப் பிராப்த பூஜை

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

கௌரவமான குடும்ப வாழ்க்கைக்குத் திருமணம் அவசியமாகிறது. தலைமுறைத் தலைமுறையாக வாரிசுகள் சிறப்பாகத் தொடர்ந்து வளர நல்ல திருமண பந்தம் ஒவ்வொருவருக்கும் தேவையாகிறது.

விரும்பிய வண்ணம் மணமகனோ மணமகளோ அமைவது இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். ஆஸ்தி, அந்தஸ்து, அழகு, திறமை எல்லாம் இருந்தும் பலருக்குச் சரியான வரன் அமைவது இல்லை.

ஒருவேளை அமைந்தாலும் அந்தத் திருமண பந்தம் தொடர்ந்து நிலைப்பதும் இல்லை. இனிமையான இல்லறம் அமைய ஒருவருக்கு ஜாதக பலம், தெய்வ பலம், பித்ருக்களின் ஆசி எனப் பல விஷயங்கள் சாதகமாக அமைய வேண்டும் என்கிறது ஆன்மிகம்.

கங்கணப் பிராப்த பூஜை
கங்கணப் பிராப்த பூஜை

எல்லா விஷயங்களும் பாதகமாக அமைந்தாலும் ஒரு சில விசேஷமான திருத்தலங்கள் ஒருவரின் பாதகங்களை எல்லாம் சாதகமாக்கி திருமண வரத்தை அளிக்கின்றன. இறைவனின் மீது ஆழ்ந்த நம்பிக்கை, சில எளிய பரிகாரங்கள் வழியே நம் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பது ஆன்மிக நம்பிக்கை.

அந்த வகையில் சிறப்பானதொரு கல்யாணப் பரிகாரத் தலம் ஒன்று புதுச்சேரி தென்னம்பாக்கத்தில் உள்ளது. ஆம் திருமணப் பரிகாரம் மட்டுமின்றி இது சர்வப் பரிகாரத் தலமாகவும் இது இப்போது சிறந்து விளங்கி வருகிறது.

வைகுந்தம் விட்டு நீங்கிய மகாலக்ஷ்மி தென்னகத்தில் பல்வேறு தலங்களில் தவமிருந்து திருமாலை வேண்டினாள் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த வகையில் அந்நாளைய நடுநாட்டில் திருமகள் எழுந்தருளிய தலங்களுள் இந்த தென்னம்பாக்கமும் ஒன்று என்று நம்பப்படுகிறது.

மாதிருபுரம், புண்டரீகா க்ஷேத்ரம், ரமாபுரி என்றெல்லாம் போற்றப்பட்ட இத்தலத்தில் தேவர்களுக்குக் கல்யாணத் திருக்கோலத்தில் கல்யாண வேங்கடேசரும் மகாலட்சுமியும் காட்சி தந்து வரம் அருளினர்.

அதே இடத்தில தேவர்களால் பெரும் ஆலயம் ஒன்று எழுந்தது என்கிறது தலவரலாறு.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மறைந்திருந்த மாதவன் தம்மை மீண்டும் வெளிப்படுத்திக் கொள்ள திருவுளம் கொண்டார். பகவான் ஸ்ரீசீதாராம சுவாமிகளின் அருளால் இந்த ஆலயம் கண்டறியப்பட்டது.

மேலும் அகத்தியர் நாடி, வசிஷ்ட நாடி, திருமூலர் நாடி, போகர் நாடி மற்றும் தேவபிரச்னம் யாவும் உத்தரவிட ஸ்ரீமதி செல்வாம்பிகை நாச்சியாரால் இந்த ஆலயம் கட்டப்பட்டது. அன்று முதல் இந்த ஆலயம் திருமண வரம் அருளும் விசேஷத் தலமானது.

ஏகாதசி நாளில் இங்கு நடைபெறும் கல்யாணக் கங்கணப் பிராப்த வழிபாடு வெகு சிறப்பானது. இந்நாளில் இங்கு வந்து வழிபட்டு கல்யாண வேங்கடேசருக்கு நடைபெறும் கங்கணப் பிராப்த பூஜையில் கலந்து கொண்டு கங்கணம் கட்டிக் கொண்டால் நிச்சயமாக திருமண வரம் கிடைக்குமாம்.

அவ்வாறு அமையும் திருமண வாழ்வும் நீண்ட காலத்துக்குச் சிறப்பாக அமையும் என்பதும் நம்பிக்கை.

கங்கணப் பிராப்த பூஜை
கங்கணப் பிராப்த பூஜை

சக்தி விகடன் வாசகர்களின் குறைகள் தீரவும் வளங்கள் சேரவும் வரும் ஆடி ஏகாதசி 20.7.25 நாளில் இங்கு கங்கணப் பிராப்த சங்கல்பப் பிரார்த்தனை நடத்தப்படவுள்ளது.

காலை 11.30 மணி அளவில் நடைபெறும் இந்த விசேஷ பரிகார பூஜையில் நீங்களும் கலந்துகொள்ளலாம். அதன் பலனாக, சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.

இங்கு தரப்படும் ரட்சையும் குங்குமமும் உங்களுக்கான தீர்வாக அமையும். 48 நாள்களுக்குள் உங்கள் பிரச்னை யாவும் தீரும்; உங்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தையும் அதிசயத்தையும் காண்பீர்கள்!

மேலும் இங்கு ஏகாதசி சக்கரத்தாழ்வார் வழிபாடும், திருவோண பெருமாள் வழிபாடும் சுவாதி நட்சத்திர நாளில் ஸ்ரீநரசிம்ம வழிபாடும் சிறப்பானது.

ராகு-கேதுவுக்கான பரிகார பூஜைகளும் இங்கு சிறப்பானது. தேய்பிறை அஷ்டமியில் செய்யப்படும் துர்கா பூஜையும் உங்கள் வாழ்வை வளமாக்க உதவும் என்பது நம்பிக்கை.

புதுவை தென்னம்பாக்கம் ஸ்ரீகல்யாண வேங்கடேச பெருமாள் தலத்தில் நடைபெறும் கல்யாண கங்கணப் பிராப்த பூஜையில் கலந்து கொண்டால் உங்கள் வாழ்வின் குறைகள் யாவும் தீர்ந்து நலங்கள் சேரும் என்பது நிச்சயம்.

KANGANA PIRAPTHA POOJAI QR CODE FOR REGISTRATION

KANGANA PIRAPTHA POOJAI QR CODE FOR REGISTRATION

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான  சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், பூஜை வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, அட்சதை, குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.  https://www.facebook.com/SakthiVikatan

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

ஆசியாவிலே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் கோயில் தேர்; சுத்தம் செய்த தீயணைப்புத்துறை | Photo Album

ஆசியாவிலே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் திருக்கோயில் தேரை சுத்தம் செய்த தீயணைப்புத்துறை வீரர்கள்.! ”6 முறை அறுந்த நெல்லையப்பர் தேர் வடங்கள்”- அதிகாரிகளின் அலட்சியம் காரணமா? - வேதனையில் பக்தர்கள்!Junior ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு; `திமுக அரசின் வெற்று அறிவிப்பை ஏற்க முடியாது' - சீமான்

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்த குடமுழுக்கினை தமிழில் நடத்திடக் கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்... மேலும் பார்க்க

"கைலாசா எங்கு உள்ளது? எப்படிச் செல்வது?" - நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கேள்வி

"கைலாசா எங்கு உள்ளது? அங்கு எப்படிச் செல்வது? நீங்கள் சென்று உள்ளீர்களா? பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை உண்டா?" என நித்யானந்தா வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நித்யான... மேலும் பார்க்க

48 நாளில் வேண்டியவை நிறைவேறும்; தடைகளை உடைத்து ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெறலாம்! - நிகும்பலா ஹோமம்

24-6-2025 அமாவாசை இரவில் தாராசுரம் வீரபத்திரர் ஆலய நிர்வாகம் நிகும்பலா ஹோமம் நடத்தவுள்ளது. இதில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டால் தடைகளை உடைத்து ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெறலாம்! 48 நாளில் வே... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு: கோபுர புதுப்பிப்பு தொடக்கம்; 14 ஆண்டுகளாகச் சேதமாகாத கலச தானியம்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.இக்கோயிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையில... மேலும் பார்க்க

`துக்கமும் அச்சமும் தீர்ந்து அதிர்ஷ்டசாலியாக வேண்டுமா’ 48 நாளில் நடைபெறும் அதிசயம்! நிகும்பலா ஹோமம்!

கும்பகோணம் அடுத்த தாராசுரம் ஸ்ரீவீரபத்திரர் உடனுறை பத்ரகாளி கோயிலில் 64 கோடி யோகினிகள் கூடி தேவியை வழிபட்டார்கள் என இந்த ஆலய தலவரலாறு கூறுகிறது. 24-6-2025 தாராசுரம் வீரபத்திரர் ஆலய நிர்வாகம் நிகும்பலா... மேலும் பார்க்க