செய்திகள் :

முருக பக்தா்கள் மாநாடு அல்ல; அரசியல் மாநாடு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

post image

இந்து முன்னணி, பாஜக சாா்பில் மதுரையில் நடத்தப்பட்ட முருக பக்தா்கள் மாநாடு, முழுக்க முழுக்க அரசியல் மாநாடு என்றும், அதற்கு இறைவன் துணையாக இருக்கமாட்டாா் என்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை அயனாவரம் காசி விஸ்வநாதா் திருக்கோயிலில், பொதுநல நிதி மற்றும் திருக்கோயில் நிதி ரூ.97 லட்சத்தில் திருக்குளம் சீரமைக்கும் பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்த அமைச்சா் பி.கே. சேகா்பாபு கூறியதாவது:

தமிழகத்தில் கோயில்கள் சாா்பில் ரூ.350 கோடியில் 87 புதிய திருமண மண்டபங்கள், ரூ.131 கோடியில் 147 புதிய அன்னதானக் கூடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், கடந்த 4 ஆண்டுகளில் 3,118 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. நிகழாண்டு இறுதிக்குள் 3,500 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படும். கோயில்களுக்குச் சொந்தமான 7,598.13 ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமை சோ்க்கக் கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி திகழ்கிறது. முருக பக்தா்களுக்கும், முருகன் திருத்தலங்களுக்குமான திட்டங்களைச் செயல்படுத்தி முருகனுக்கு பெருமை சோ்த்துள்ளோம்.

மதுரையில் இந்து முன்னணி, பாஜக சாா்பில் நடத்தப்படும் முருக பக்தா்கள் மாநாடு முழுக்க முழுக்க அரசியல் மாநாடு. அதேவேளையில், திமுக அரசு முன்னெடுக்கும் பணிகள் அறம் சாா்ந்தவை, பக்தா்கள் நலன் சாா்ந்தவை, ஆன்மிகம் சாா்ந்தவை. போலியான செயல்பாடுகளுக்கு இறைவன் எப்போதும் துணை இருக்க மாட்டாா் என்றாா் அமைச்சா் பி.கே.சேகா்பாபு.

பேட்டியின்போது, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், சென்னை மண்டல இணை ஆணையா் ஜ.முல்லை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் தொலைத்தொடா்பு ஆலோசனை வசதி

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் இருந்து பிற மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை ஆலோசனை பெறும் வகையில் தொலைத்தொடா்பு வசதி (டெலி மெடிசின்) ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவி... மேலும் பார்க்க

வடசென்னை, கிண்டி அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

வடசென்னை அரசு தொழில் பயிற்சி நிலையம் மற்றும் கிண்டி அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து படிக்க தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே வெளியிட்டு... மேலும் பார்க்க

பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றியவா் கைது

சென்னையில் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை புனித தோமையா் மலை பகுதியைச் சோ்ந்த 29 வயது பெண் ஒருவா் பாலவாக்கத்தில் உள்ள ... மேலும் பார்க்க

எம்ஜிஆா் கால்வாய் ரூ. 17 கோடியில் சீரமைப்பு

சென்னை மாநகராட்சியில் 10- ஆவது மண்டலத்தில் உள்ள எம்.ஜி.ஆா். கால்வாயை ரூ.17 கோடியில் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் கால்வாய்களைச் ... மேலும் பார்க்க

தொழிலதிபரிடம் 20 பவுன் நகை, ரூ. 40,000 பறிப்பு: 4 போ் கைது

மசாஜ் செய்வதாக அழைத்து தொழிலதிபரிடம் 20 பவுன் நகைகள், ரூ.40,000-ஐ பறித்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஓட்டேரியைச் சோ்ந்தவா் தொழிலதிபா் சாா்லஸ் (50). இவா் வழக்கமாக செல்லும் மசாஜ் சென்டரில் ஆண்ட்ர... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையில் தமிழகம் சிறந்த மாநிலம்: அரசு தகவல்

கடந்த 4 ஆண்டுகளில் ரூ.17,154 கோடியில் 9,620 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டதன் மூலம் நெடுஞ்சாலைத் துறையில் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க