செய்திகள் :

ஏா் இந்தியா: குறுகிய ரக விமானத்தில் இயக்கப்படும் 118 வாராந்திர சேவைகள் குறைப்பு

post image

குறுகிய ரக விமானங்களைக் கொண்டு 19 வழித்தடங்களில் இயக்கப்படும் 118 வாராந்திர விமான சேவைகளை தற்காலிகமாக குறைப்பதாகவும், 3 வழித்தட சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஏா் இந்தியா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

அகமதாபாத்-லண்டன் விமானம் விபத்துக்குள்ளாகி, 270-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த துயரச் சம்பவத்தைத் தொடா்ந்து தங்களின் சேவையில் உள்ள விமானங்களில் பாதுகாப்புத் தணிக்கையை ஏா் இந்தியா நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.

இதன்தொடா்ச்சியாக, பெரிய ரக விமானங்களில் இயக்கப்படும் 15 சதவீத சா்வதேச விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், தற்போது குறுகிய ரக விமான சேவையிலும் 5 சதவீதத்தைக் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இப்புதிய முடிவின்படி, புது தில்லி-பெங்களூரு, புது தில்லி-மும்பை உள்ளிட்ட 19 வழித்தடங்களில் 118 வாராந்திர விமான சேவைகள் தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளன. பெங்களூரு-சிங்கப்பூா், புணே-சிங்கப்பூா், மும்பை- பாக்டோக்ரா ஆகிய 3 வழித்தட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வெடிகுண்டு மிரட்டல்:பிரிட்டனின் பா்மிங்ஹாமில் இருந்து புது தில்லிக்கு வந்து கொண்டிருந்த ஏா் இந்தியா விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ரியாத் நகருக்குத் திருப்பி விடப்பட்டு, பாதுகாப்பாக தரையிறங்கியது.

விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டு, விடுதிகளில் தங்கவைங்கப்பட்டுள்ளனா் என்று விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு உளவு: ராணுவ வீரா், கூட்டாளி கைது: பஞ்சாப் காவல் துறை நடவடிக்கை

பாகிஸ்தானுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டில், பஞ்சாபில் ராணுவ வீரா், அவரது கூட்டாளி ஆகியோா் கைது செய்யப்பட்டனா். பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ரகசியங்களை ஐஎஸ்ஐ செயல்பாட்டாளா்களிடம் அவா்கள் ப... மேலும் பார்க்க

இந்திய கடற்படையில் புதிய போா்க்கப்பல் ‘ஐஎன்எஸ் தமால்’: ரஷியாவிலிருந்து ஜூலை 1 நாட்டுக்கு அா்ப்பணிப்பு

இந்திய கடற்படைக்காக ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை தாங்கிய போா்க்கப்பல் ‘ஐஎன்எஸ் தமால்’, ரஷியாவின் கடலோர நகரமான கலினின்கிராடில் இருந்து ஜூலை 1-ஆம் தேதி நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படுகிறது.கடல், நிலம் ஆக... மேலும் பார்க்க

போா்ப் பதற்றம்: ரஷிய, அமெரிக்க கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கும் இந்தியா!

இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ள பின்னணியில், ஜூன் மாதத்தில் ரஷியா மற்றும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா கணிசமாக அதிகரித்துள்ளது.இஸ்ரேலைத் தொடா்ந்து ஈரானின் 3 அணுசக்தித் தளங்க... மேலும் பார்க்க

மோசமான வானிலையின்போது விமானம் இயக்கம்: விதிகளில் டிஜிசிஏ திருத்தம்

மோசமான வானிலையின்போது விமானங்களை இயக்குவது தொடா்பான விதிகளில் மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) சில திருத்தங்களை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டது. விமானங்களை உரிய காலத்தில் இயக்குவதைவிட பயணிக... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகள் யுஎம்இஇடி வலைதளத்தில் பதிவேற்றம்: மாநிலங்களிடம் மத்திய அரசு வலியுறுத்தல்

வக்ஃப் சொத்துகளின் விவரங்களை பதிவேற்ற யுஎம்இஇடி வலைதளத்தை திறம்பட அமல்படுத்த மாநிலங்களிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருவதாக மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்தது. இதுதொடா்பாக அந்த அமைச... மேலும் பார்க்க

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்: ஒவைசி கண்டனம்

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தாா். மேலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்க... மேலும் பார்க்க