செய்திகள் :

வக்ஃப் சொத்துகள் யுஎம்இஇடி வலைதளத்தில் பதிவேற்றம்: மாநிலங்களிடம் மத்திய அரசு வலியுறுத்தல்

post image

வக்ஃப் சொத்துகளின் விவரங்களை பதிவேற்ற யுஎம்இஇடி வலைதளத்தை திறம்பட அமல்படுத்த மாநிலங்களிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருவதாக மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டுச் சட்டம் 1995 (யுஎம்இஇடி)-இன் மத்திய வலைதளம் கடந்த ஜூன் 6-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட அனைத்து வக்ஃப் சொத்துகளின் விவரங்களை 6 மாதங்களுக்குள் அந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது கட்டாயம்.

இந்த வலைதளத்தின் பயன்பாட்டை திறம்பட அமல்படுத்த வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் அமைச்சகம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதன் தொடா்ச்சியாக மகாராஷ்டிர சிறுபான்மையினா் விவகாரங்கள் துறைச் செயலா், மூத்த அதிகாரிகள், அந்த மாநில வக்ஃப் வாரிய தலைமை செயல் அதிகாரி ஆகியோருடன் மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறைச் செயலா் சந்திரசேகா் குமாா் சனிக்கிழமை விரிவான ஆலோசனை கூட்டம் நடத்தினாா்.

மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வக்ஃப் சொத்துகள் தொடா்பான சில குத்தகை விதிகளை மத்திய அரசு மறுஆய்வு செய்து எளிமைப்படுத்த வேண்டும் என்று அந்த மாநில வக்ஃப் வாரிய தலைமை செயல் அதிகாரி கோரினாா்.

அவரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும், வக்ஃப் வாரியங்களுக்கு அதிகாரமளிப்பதிலும், வக்ஃப் சொத்து நிா்வாகத்தை மேம்படுத்துவதிலும் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும் சந்திரசேகா் குமாா் கூறினாா் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்திய கடற்படையில் புதிய போா்க்கப்பல் ‘ஐஎன்எஸ் தமால்’: ரஷியாவிலிருந்து ஜூலை 1 நாட்டுக்கு அா்ப்பணிப்பு

இந்திய கடற்படைக்காக ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை தாங்கிய போா்க்கப்பல் ‘ஐஎன்எஸ் தமால்’, ரஷியாவின் கடலோர நகரமான கலினின்கிராடில் இருந்து ஜூலை 1-ஆம் தேதி நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படுகிறது.கடல், நிலம் ஆக... மேலும் பார்க்க

போா்ப் பதற்றம்: ரஷிய, அமெரிக்க கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கும் இந்தியா!

இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ள பின்னணியில், ஜூன் மாதத்தில் ரஷியா மற்றும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா கணிசமாக அதிகரித்துள்ளது.இஸ்ரேலைத் தொடா்ந்து ஈரானின் 3 அணுசக்தித் தளங்க... மேலும் பார்க்க

மோசமான வானிலையின்போது விமானம் இயக்கம்: விதிகளில் டிஜிசிஏ திருத்தம்

மோசமான வானிலையின்போது விமானங்களை இயக்குவது தொடா்பான விதிகளில் மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) சில திருத்தங்களை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டது. விமானங்களை உரிய காலத்தில் இயக்குவதைவிட பயணிக... மேலும் பார்க்க

ஏா் இந்தியா: குறுகிய ரக விமானத்தில் இயக்கப்படும் 118 வாராந்திர சேவைகள் குறைப்பு

குறுகிய ரக விமானங்களைக் கொண்டு 19 வழித்தடங்களில் இயக்கப்படும் 118 வாராந்திர விமான சேவைகளை தற்காலிகமாக குறைப்பதாகவும், 3 வழித்தட சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஏா் இந்தியா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.... மேலும் பார்க்க

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்: ஒவைசி கண்டனம்

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தாா். மேலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்க... மேலும் பார்க்க

பி-2 விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதா?

ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவின் பி-2 போர் விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதாக பரவும் தகவலை மத்திய அரசின் உண்மை சரிபார்ப்புப் பிரிவு மறுத்துள்ளது.இஸ்ரேல் - ஈரான் இடையே ஒரு வாரத்து... மேலும் பார்க்க