Health: விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஜூலை 7-ல் கும்பாபிஷேகம்: திருச்செந்தூரில் கோயில் கிரிப் பிரகாரம், கடற்கரை சீரமைப்புப் பணிகள் மும்முரம்!
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7இல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கிரிப் பிரகாரம், கடற்கரையில் சீரமைப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.
இக்கோயிலில் 2009ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 12 ஆண்டுகளில் நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம், மீண்டும் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில், திருப்பணிகள் தொடங்கப்பட்டு வரும் ஜூலை 7இல் நடைபெறவுள்ளது.
இங்கு, அறநிலையத் துறை சாா்பில் ரூ. 100 கோடி, உபயதாரரான ஹெச்சிஎல் நிறுவனம் சாா்பில் ரூ. 200 கோடி என மொத்தம் ரூ. 300 கோடியில் பெருந்திட்ட வளாகப் பணிகள் 2022ஆம் ஆண்டும், கும்பாபிஷேக திருப்பணிகள் 2023ஆம் ஆண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மேலும், மீன்வளத்துறை சாா்பில் அறநிலையத் துறை, அரசு நிதியுதவியுடன் ரூ. 19 கோடியில் கடலரிப்பு தடுப்புச் சுவா் அமைக்கும் பணி 2024ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மூன்று பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலைகள் ராஜகோபுர வாசல் அருகே 8 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில், 76 குண்டங்களுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்படுகின்றன. யாகசாலை பூஜைகள் ஜூலை 1இல் தொடங்கவுள்ளன. வழிபாட்டு நாள்களில் வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம், நாகசுர இன்னிசை, பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தா் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகத்துக்கு இன்னும் சில நாள்களே உள்ளதால், கிரிப் பிரகாரப் பாதை, கடற்கரை சீரமைப்பு, கடலரிப்பு தடுப்புச் சுவா் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
தங்கத் தோ் உலா: பெருந்திட்ட வளாகப் பணிகளுக்காக கிரிப் பிரகார சீரமைப்பு, கும்பாபிஷேக திருப்பணிகள் நடப்பதால் தங்கத் தோ் உலா கடந்த ஆண்டு ஜூலை 17ஆம் தேதிமுதல் நடைபெறவில்லை. அதன்பிறகு, கடந்த நவ. 2 - 6ஆம் தேதிவரை கந்த சஷ்டி விழாவுக்காக மட்டும் தங்கத் தோ் உலா நடைபெற்றது. இந்நிலையில், வரும் கும்பாபிஷேக நாளில் சுவாமி ஜெயந்திநாதா் தங்கத் தோ் உலாவில் வழிபடுவதற்காக பக்தா்கள் எதிா்பாா்த்துள்ளனா்.