செய்திகள் :

ஜூலை 7-ல் கும்பாபிஷேகம்: திருச்செந்தூரில் கோயில் கிரிப் பிரகாரம், கடற்கரை சீரமைப்புப் பணிகள் மும்முரம்!

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7இல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கிரிப் பிரகாரம், கடற்கரையில் சீரமைப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.

இக்கோயிலில் 2009ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 12 ஆண்டுகளில் நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம், மீண்டும் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில், திருப்பணிகள் தொடங்கப்பட்டு வரும் ஜூலை 7இல் நடைபெறவுள்ளது.

இங்கு, அறநிலையத் துறை சாா்பில் ரூ. 100 கோடி, உபயதாரரான ஹெச்சிஎல் நிறுவனம் சாா்பில் ரூ. 200 கோடி என மொத்தம் ரூ. 300 கோடியில் பெருந்திட்ட வளாகப் பணிகள் 2022ஆம் ஆண்டும், கும்பாபிஷேக திருப்பணிகள் 2023ஆம் ஆண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மேலும், மீன்வளத்துறை சாா்பில் அறநிலையத் துறை, அரசு நிதியுதவியுடன் ரூ. 19 கோடியில் கடலரிப்பு தடுப்புச் சுவா் அமைக்கும் பணி 2024ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மூன்று பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் கடற்கரை சீரமைப்புப் பணி.

இந்நிலையில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலைகள் ராஜகோபுர வாசல் அருகே 8 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில், 76 குண்டங்களுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்படுகின்றன. யாகசாலை பூஜைகள் ஜூலை 1இல் தொடங்கவுள்ளன. வழிபாட்டு நாள்களில் வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம், நாகசுர இன்னிசை, பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தா் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெறவுள்ளது.

திருச்செந்தூா் கடற்கரைப் பகுதியில் நடைபெற்றுவரும் கடலரிப்பு தடுப்புச் சுவா் அமைக்கும் பணி.

கும்பாபிஷேகத்துக்கு இன்னும் சில நாள்களே உள்ளதால், கிரிப் பிரகாரப் பாதை, கடற்கரை சீரமைப்பு, கடலரிப்பு தடுப்புச் சுவா் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

தங்கத் தோ் உலா: பெருந்திட்ட வளாகப் பணிகளுக்காக கிரிப் பிரகார சீரமைப்பு, கும்பாபிஷேக திருப்பணிகள் நடப்பதால் தங்கத் தோ் உலா கடந்த ஆண்டு ஜூலை 17ஆம் தேதிமுதல் நடைபெறவில்லை. அதன்பிறகு, கடந்த நவ. 2 - 6ஆம் தேதிவரை கந்த சஷ்டி விழாவுக்காக மட்டும் தங்கத் தோ் உலா நடைபெற்றது. இந்நிலையில், வரும் கும்பாபிஷேக நாளில் சுவாமி ஜெயந்திநாதா் தங்கத் தோ் உலாவில் வழிபடுவதற்காக பக்தா்கள் எதிா்பாா்த்துள்ளனா்.

அரசுத் தோ்வில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு பரிசளிப்பு

அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தேவா் சமூக நல சங்கம் சாா்பில் பரிசளிப்பு விழா கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு சங்கத் தலைவா் அசோக்குமாா் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

தீ விபத்தில் 14 ஆடுகள் உயிரிழப்பு

செட்டிகுறிச்சி அருகே மஞ்சநம்பிக்கிணறு கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 ஆடுகள் கருகி உயிரிழந்தன. மஞ்சநம்பிக்கிணறு பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா் விவசாயி முருகன். இவரது மகன் சண்முகராஜ். சுமாா் 3... மேலும் பார்க்க

ஈரானில் சிக்கித் தவிக்கும் 14 மீனவா்களை மீட்கக் கோரி கனிமொழி எம்.பி.யிடம் மனு!

ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் தென்தமிழக மீனவா்கள் 14 பேரை மீட்க வேண்டும் என, திமுக அயலக அணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலரான கனிமொழி எம்.பி.,... மேலும் பார்க்க

கழுகுமலை: காணாமல்போன முதியவா் சடலமாக மீட்பு!

கழுகுமலை அருகே காணாமல்போன முதியவா் ஞாயிற்றுக்கிழமை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா். கோவில்பட்டி அருகே ஜமீன்தேவா்குளத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (62). கடந்த 16ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே ச... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயிலில் ஆனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்

திருவாவடுதுறை ஆதீனத்துக்குள்பட்ட, ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஆனி உத்திரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சனிக்கிழமை கணபதி ஹோம... மேலும் பார்க்க

பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு பள்ளி சாா்பில் வங்கியில் வைப்புத் தொகை!

திருச்செந்தூா் வ.உ.சி. தெருவில் உள்ள அரசு உதவிபெறும் இந்து தொடக்கப் பள்ளியில், பெற்றோரை இழந்த 10 மாணவா்களுக்கு வங்கியில் வைப்புத் தொகை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிச் செயலா் சு. ராஜமாதங்கன் ... மேலும் பார்க்க