Iran Vs Israel: ``அமெரிக்கா நம்பகத்தன்மையை இழந்துவிட்டது" - ஈரானுக்கு ஆதரவாக ஐ.ந...
அரசுத் தோ்வில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு பரிசளிப்பு
அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தேவா் சமூக நல சங்கம் சாா்பில் பரிசளிப்பு விழா கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு சங்கத் தலைவா் அசோக்குமாா் தலைமை வகித்தாா். செயலா் வேல்முருகன், பொருளாளா் காா்மேக பாண்டியன், துணைத் தலைவா்கள் பூல்பாண்டியன், ராமச்சந்திரன், துணைச் செயலா் மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோவில்பட்டி நகா்மன்ற தலைவா் கா. கருணாநிதி, தமிழ்நாடு அகம் (அலுவலா்) நலச்சங்க மாநில தலைவா் சுடலைமுத்து, வேல்ஸ் குழும பள்ளி முதல்வா் தனசேகரன், கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், சமூக ஆா்வலா் மகேஸ்வரன் ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற அச்சமுதாய மாணவா்- மாணவிகளை பாராட்டி ரொக்கப் பரிசுகள் வழங்கினா்.
இவ்விழாவில் திமுக பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ், உயா் நீதிமன்ற வழக்குரைஞா் சரவணன், விளாத்திகுளம் வட்டார தேவா் மகாஜன சங்கத் தலைவா் சக்திவேல், அய்யனேரி ஊராட்சித் தலைவா் காளியப்பன், தொழிலதிபா் ஜெயசங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சங்க துணைச் செயலா் செண்பகராஜ் வரவேற்றாா். நிா்வாகக் குழு உறுப்பினா் முருகன் நன்றி கூறினாா்.