சின்னஞ்சிறு கிளியே: எதிர்நீச்சல் தொடர் பாணியில் புதிய தொடர்!
நீ சொன்னத கேட்காம சினிமாவை நம்பி வந்தேன்ப்பா! - மகனின் கண்ணீர் கடிதம் | #உறவின்கடிதம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
ஸாரிப்பா...
இப்ப உங்ககிட்ட வேற ஒன்னும் சொல்ல தோனல எனக்கு,
நான் மட்டும் நீங்க சொன்ன மாதிரி பி.இ படிச்சிருந்தா, நீங்க சொன்ன மாதிரி நல்ல வேலைக்கி போயிருந்தா, நீங்க சொன்ன மாதிரி லவ் பண்ணாம இருந்திருந்தா, நீங்க சொன்ன பொண்ணையே கல்யாணம் பண்ணிருந்தா, நீங்க சொன்ன மாதிரி படம், சினிமானு போகாம இருந்தா, நீங்க சொன்னதெல்லாம் கேட்டுகிட்டு உங்க பிள்ளையாவே உங்க கால சுத்திகிட்டே இருந்திருந்தா, நீங்க கூப்பிட்டதும் ஓடி வந்து உங்கள பாத்துருந்தா நான் இப்ப நிம்மதியா இருந்திருப்பேனோ என்னவோ!

போக்கத்தவன்தான் போலீஸ் வேலைக்கு போவாங்கிற மாதிரி நம்ம ஊர்ல சினிமாக்காரன்னாலே ஊதாரி, சோம்பேறி, உருப்பட தெரியாதவன்.
அதுக்கு விதிவிலக்கா நான் இருந்து காட்டுறேன்னு சவால் விட்டு சென்னைக்கி கிளம்பினேன்.
தமிழ் படிச்ச தைரியத்துல, தமிழ் கொடுத்த திமிர்ல பேனாவ தூக்கிக்கிட்டு வந்து இறங்கிட்டேன். அதுவரைக்கும் வெளியிலிருந்து பாத்த சினிமா உலகம் வேற, சினிமாக்காரனா இருந்து பாக்குற சினிமா உலகம் வேறனு காலம் ரொம்ப சீக்கிறமா புரிய வச்சது. என்ன? அதுக்குள்ள 15 வருசம் பறந்துப்போச்சு.
ம் கேட்டுகிட்டு உங்க பிள்ளையாவே உங்க கால சுத்திகிட்டே இருந்திருந்தா, நீங்க கூப்பிட்டதும் ஓடி வந்து உங்கள பாத்துருந்தா நான் இப்ப நிம்மதியா இருந்திருப்பேனோ என்னவோ!
இந்த காலத்துல பத்திரிக்கைகளுக்கு கவிதை, போட்டிகளுக்கு கதைகள், ஒருசில படங்களுக்கு வசனம்னு எழுதி எனக்குனு ஒரு சினிமா வட்டம் உருவாகி, அதனால வர்ற வருமானம் சென்னையில தங்கவும், திங்கவும், ஆபீஸ் ஆபீஸா அலஞ்சி வாய்ப்புத்தேடவுமே சரியா போச்சி.

ஒரு எழுத்தாளனுக்கு இவங்க தர்ற மரியாத இருக்கே.. ஒருவேள சாப்பாட்டுக்கும், கை செலவுக்கும், டீ வாங்கி குடுத்தும் வேலைய வாங்கிகிட்டு, செஞ்ச வேலைக்கு தர்ரேனு சொன்ன சம்பளத்த முழுசா தராம, காச பாக்காம வேலை முடிச்ச படங்கள் ரிலீஸ் ஆகாம, பொருளாதாரத்துக்கு தத்தளிக்கிறபோதும், உங்க வளப்புக்கு பங்கம் இல்லாம கெட்டப்பழக்கம் ஏதும் பழகனாலும், சேமிப்புங்கிற வார்த்தைக்கே இடமில்லாத ஓட்டத்துல அவசரத்தேவைக்குக்கூட உதவிகேட்டு நிக்கிற நிலமையிலயும் இது எதயுமே உங்ககிட்ட சொல்லாம பல்ல கடிச்சிகிட்டு போராடுறேன்.
நான் தேர்ந்தெடுத்த துறையே உங்களுக்கு பிடிக்காதப்போ, அதுல நான் படுற கஷ்டத்த உங்ககிட்ட சொன்னா அது எனக்கு பேக்ஃபையர் ஆகும்னு தெரிஞ்சே மறச்சிட்டேன்.
கிட்டதட்ட தண்ணி தெளிச்சி விட்ட கணக்கா நானும் உங்களவிட்டு ரொம்பதூரம் விலகியே இருந்துட்டேன். இந்த பதினஞ்சு வருசத்துல உங்ககிட்ட நான் பேசுனது என்னவோ பத்தோ, இருவதோ தடவதான் இருக்கும். வருசத்துக்கு ஒருமுறை உங்களோட 10 நிமிசம் போன் பேசிட்டாலே அது பெரிய விசயம்.

உங்கமேல இருந்த அளவு கடந்த மரியாதையும், நீங்க சொல்லியும் கேக்காம நான் தேர்ந்தெடுத்த பாதையில இன்னும் சொல்லிக்கிற மாறி ஜெயிக்கலயேங்கிற போராட்டமும் என்னைய உங்களவிட்டு பிரிச்சிடுச்சு.
கடசியா நான் சென்னைக்கு பஸ் ஏற வீட்டுலேர்ந்து டவுனுக்கு போகும்போது உங்க பக்கத்துல உக்காந்து வந்த அந்த 30 நிமிச பயணம் இப்பவும் வாசம் மாறலப்பா..
ஃபோன் எடுத்ததும் 'என்னய்யா.. நல்லாருக்கியா? சாப்டியா'னு கேட்டு நான் பதில் சொல்லறதுக்குள்ள, 'எப்படி போகுது'னு நீங்க கேக்குற கேள்விக்கு என்ன பதில் சொல்வேனு பயந்தே உங்ககிட்ட பேசாம இருந்துட்டேன்.
வயசு ஓடுது.. ஒழுங்கா படிச்ச படிப்புக்கு ஒரு வேலைய பாக்காம இவனுக்கு சினிமால யார தெரியும்? எத நம்பி போறான்? என்னத்தெரியும்? ஏன் இப்படி பண்றான்னு, நீங்க வருத்தப்பட்டு புலம்பினதா சொக்கு மாமா ஒருமுற சொன்னாரு.
எங்க தன்னோட மகன் தெரிஞ்ச பாதைய விட்டு, தெரியாத தொழில தொட்டு வாழ்க்கையில முன்னேறாம வீணா போயிடுவானோனு என்மேல உங்களுக்கு இருக்க கவலையும், பொறுப்பும் உங்கள இப்படி யோசிக்க வச்சது தப்பில்ல.

நான் என் திறமைய நம்பி, உழைப்ப நம்பி இறங்கிருக்கேன். குடியிருக்க வீடுகூட இல்லாம சத்திரத்துல ஒண்டிகிடந்து, கிராமத்துல விவசாய கூலி வேல மட்டுமே பாக்குற சமூகத்துலேர்ந்து வந்த நீங்க நம்ம ஊர்லயே முதல் ஆளா நிலம் வாங்கி நில உரிமையாளரானிங்க..
ஒதுக்குபுற காலணிய விட்டு, மேலத்தெருவுல இடம் வாங்கி சொந்த வீடு கட்டி, ஒன்னுமில்லாத பையனா பொறந்து வளந்த அதே ஊர்ல வீடு வாசல், நிலபுலனோட பேர் சொல்லும் ஆளா உழச்சி முன்னேறி இருக்க உங்களோட இரத்தம் நான். நிச்சயம் ஒருநாள் நான் ஜெயிச்சி காட்டுவேன். உங்கள மேடையேத்தி என்னோட விருத உங்க கையால வாங்க வச்சி உங்களுக்கும், நம்ம ஊருக்கும், இந்த உலகத்துக்கும் சொல்லுவேன் உங்களோட மகன் நான் ஜெயிச்சிட்டேனு.
இந்த ஒரு வைராக்கியத்துல இத்தன வருசமா நான் விதச்ச உழைப்பு வீண் போகலப்பா..
நானே ஃபோன் பண்ணி படம் ரிலீஸ் ஆகி நல்ல ரெஸ்பான்ஸ் கெடச்சிருக்கு. நம்மலோட வேலைக்கான அங்கீகாரம் கிடைக்கப்போகுதுனு சந்தோசமா சொல்லனும்னு நெனச்ச சமயத்துல உங்ககிட்டருந்து ஃபோன் வந்துச்சு.
அது வரைக்கும் உங்களோட குரல் இவ்வளவு ஒடஞ்சோ, பதட்டப்பட்டோ நான் பாத்ததில்ல.
'ரொம்ப நாளா கழுத்து புரடில மறு மாதிரி இருந்துச்சில, அது கொஞ்ச நாளா வலி எடுத்துச்சிப்பா..
எனக்கும் ஒரு சந்தேகமாவே இருந்துச்சி.. அதான் இன்னைக்கி பெரிய ஆஸ்பத்திரி போலாம்னு போனேம்ப்பா..'னு சொல்லி ஒரு அமைதி..
எனக்கு கண் கலங்கி கன்னம் நனஞ்சிருச்சு.. அத காமிச்சிக்காம,
அப்பா'ன்னேன்..
ம்ம்ம்.. என உடைந்த குரலை செருமிக்கொண்டு
'எங்க உன்ன அனாதையா விட்டு போயிடுவேனோனு பயமா இருக்குப்பா..'னு சொன்ன உங்கள தேத்த என்னோட சோகத்த, கவலைய, பயத்த மறச்சி நான்பட்ட பாடு சொல்லிமாளாது.
ஃபோன வச்சபிறகும் பதட்டத்துல கை நடுங்க, தண்ணிய குடிச்சிட்டு உக்காந்து ஒரு நிமிசம் கண்ணமூடி திறந்தா இத்தன காலம் உங்களவிட்டு பிரிஞ்சி எவ்ளோ இழந்துருக்கேனு புரிஞ்சது.

என்னடா வாழ்க்கை? காசு பின்னாலயும், வெற்றி பின்னாலயும் ஓடி ஓடி, கையில் இருக்குறது கா துட்டா இருந்தாலும் குடும்பத்தோட வாழுற வாழ்க்கைய தொலச்சிட்டு, எல்லாரும் போன பிறகு என்னத்த சாதிச்சி என்ன பண்ணப்போறோம். யாருக்காக உழைக்கிறோம்? எதுக்காக சாதிக்கிறோம்?
அப்போ எனக்குள்ள எழுந்த எந்த கேள்விக்கும் பதில் கிடைக்கல!
நீங்க என்னதான் வாழ்க்கையில முன்னேறி ஒரு ஆளாகியிருந்தாலும், 'வாய்க்கா வரப்புல, சேத்துல கெடக்குற எனக்கு எதுக்குப்பா செருப்பு'னு மாத்து துணிக்கு வழியில்லாம, ஒருவேள கஞ்சி குடிச்சி வளந்த காலத்த மறக்காம இன்னக்கி வரைக்கும் செருப்பு ஏறாத உங்க பாதத்துக்கு என்னோட வெற்றிய செருப்பாக்கனும்னுதான் குடும்பத்த மறந்து ஒழச்சேன்.
அதுல முதல் வெற்றி என்னத்தேடி வந்திருக்கு.
அப்பா..
நான் ஜெயிச்சிட்டேன்ப்பா..
நாளைக்கி என்னோட எழுத்துக்கு முதல் விருது வாங்கப்போறேன்.
எத்தனையோ முற ஊருக்கு ஒரு தரம் வாய்யா'னு நீங்க கூப்பிட்டும் வராம இருந்த நான், இப்ப அடிச்சிபுடிச்சி ஓடி வந்தும் என்னால உங்கள பாக்க முடியாம ICU வாசல்ல நிக்கிறேன்..
உங்கள கிட்ட நெருங்கி பாக்ககூட எனக்கு பாக்கியம் இல்ல.

அப்பா..
எனக்கு என்னென்னவோ சொல்ல தோணுது..
உங்ககிட்ட பேச நெனச்சதெல்லாம் எழுதி, உங்களுக்கு வாசிச்சி காட்ட சொல்லி வார்டு நர்ஸ் கிட்ட கொடுத்துருக்கேன்
இத்தன நாள் கஷ்டப்பட்ட என் வாழ்க்கையே மாறிட்டுப்பா..
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
என்ன பெத்த பெருமைக்குரிய அப்பா நீங்கதான்னு எல்லாருக்கும் காட்டனும்.
எனக்காக எழுந்து வாங்கப்பா...
ப்ளீஸ்ப்பா...
I want to be hold your hands.
