செய்திகள் :

கள்ளக்குறிச்சி: ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்லும் மாணவர்கள்... கண்டுகொள்ளுமா அரசு?

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த சில வாரங்களாக இரவு பகல் பாராமல் பரவலாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் சங்கராபுரம் அருகே உள்ள முஸ்கந்தா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அது தொடர்பாக இணையத்தில் பரவிய வீடியோக்கள், காண்போரை அச்சத்தில் ஆழ்த்தும் விதமாக அமைந்தன.

அதில் ஒரு வீடியோவில், 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கழுத்தளவு தண்ணீரில் மூழ்கிய படி பள்ளி சீருடைகள் முழுமையாக நனைந்தபடி புத்தகப்பையினை இரு கைகளால் உச்சந்தலையில் ஏந்தியவாறு வேதனையுடன் ஆற்றினைக் கடந்து பள்ளிக்குச் செல்வதைக் காணமுடிந்தது.

இது குறித்து விசாரித்தோம்...,

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே முஸ்கந்தா ஆறு அமைந்துள்ளது. கடந்த ஜூன் 12-ம் தேதி முஸ்கந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுவட்டார கிராமத்தில் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். அதிலும் குறிப்பாக பவுஞ்சிப்பட்டு, குமாரமங்கலம், காட்டுக்கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்காகவும் பள்ளிக் கல்லூரிக்குச் செல்வதற்காகவும் குமாரமங்கலம் - புதுப்பட்டு ஆகிய கிராமங்களுக்கு இடையே உள்ள ஆற்றினைக் கடந்துதான் சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பிற நகரங்களுக்குச் செல்ல வேண்டியதாக உள்ளது. அண்மையில் கல்வராயன் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக முஸ்கந்தா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பள்ளிக் குழந்தைகள், கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், விவசாயிகள் என அனைவரும் வேறு வழியின்றி, ஆபத்தை உணராமல் முஸ்கந்தா ஆற்றில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் கடந்து செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

``கனமழை வந்தாலே இதுதான் பெரும் துயரமாக இருக்கிறது" என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும் என அப்பகுதி மக்கள், புதிதாக உயர்மட்ட மேம்பாலம் கட்டித் தர வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதிருப்தி தெரிவிக்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் முஸ்கந்தா ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித் தர வேண்டும் எனப் பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நனைந்த ஆடைகளுடன் மிகவும் தாமதமாகத் தினம்தோறும் பள்ளிக்குச் செல்வதாகவும் பள்ளி முடிந்த பிறகு வீடுகளுக்கு வர மிகவும் தாமதமாவதாகவும், தண்ணீரில் அன்றாடம் செல்வதால் உடல் உபாதைகள் ஏற்படுவதாகும் பள்ளிக் குழந்தைகள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, "நான் அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டேன். இது குறித்து அரசு தரப்பு பொறியாளர்கள் இரண்டு கோடி ரூபாய்க்கு எஸ்டிமேட் போட்டு வைத்துள்ளனர். விரைந்து நடவடிக்கை மேற்கொள்கிறோம்" எனக் கூறினார்.

வருவது மழைக்காலம்... மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய, துரிதமாக பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!

மேற்குவங்க இடைத்தேர்தல் TMC வெற்றிக் கொண்டாட்டத்தில் சிறுமி உயிரிழிப்பு; மம்தா பானர்ஜி வருத்தம்

மேற்கு வங்காளம் - காளிகஞ்ச், கேரளா - நிலம்பூர், குஜராத் - விசாவதர், குஜராத் - கடி, பஞ்சாப் - லூதியானா மேற்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலுக்கான முடிவுகள் இன்று (ஜூன் 23) வெளியாகின. பஞ்சாப்... மேலும் பார்க்க

US Attack On Iran: ஈரானில் தாக்குதல் நடத்த அமெரிக்கா பயன்படுத்திய 'GBU 57' என்றால் என்ன?

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் மூன்று முக்கிய அணு உலைகளை அமெரிக்கா குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது.இந்தத் தாக்குதல் பற்றி பெருமையாகப் பேசி வருகிறார் டொனால... மேலும் பார்க்க

மதிமுக: "2026-ல் கூடுதல் தொகுதிகளில் போட்டி" - பொதுக்குழு தீர்மானத்தின் பின்னணி என்ன?

மதிமுக-வின் 31-வது பொதுக்குழுக் கூட்டம் இன்று ஈரோட்டிலுள்ள பரிமளம் ஹாலில் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பொருளாளர் மு. செந்திலதிபன், முதன்மைச... மேலும் பார்க்க

Air India Violations: "3 அதிகாரிகளை நீக்க வேண்டும்; இனி இதுபோல நடந்தால்..." - DGCA எச்சரிக்கை!

விமான பாதுகாப்பைக் கண்காணிக்கும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (Directorate General of Civil Aviation - DGCA) டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம் அதன் 3 அதிகாரிகளை அனைத்து பதவிகள் மற்றும் ... மேலும் பார்க்க

ஊட்டி இந்தி பதாகை சர்ச்சை: சுட்டிக்காட்டிய விகடன்; கிழித்தெறிந்த ரயில்வே நிர்வாகம்; பின்னணி என்ன?

சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ரயில் நிலையங்களில் ஊட்டி ரயில் நிலையம் ஒன்றாகும்.பாரதியாரின் பாடல் வரிகளை இந்து மகாசபையை உருவாக்கியவர்களில் ஒருவரான மதன் மோகன்... மேலும் பார்க்க

Yoga Day: "யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை" - பிரதமர் மோடி பேச்சு

'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா' என 11 ஆவது சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரமாண்ட யோகா நிகழ... மேலும் பார்க்க