செய்திகள் :

அமெரிக்கா, இஸ்ரேலின் அடுத்த குறி அரபு நாடுகளே: ஃபரூக் அப்துல்லா கண்டனம்!

post image

ஸ்ரீநகர்: அமெரிக்கா, இஸ்ரேலின் அடுத்த குறி அரபு நாடுகளே என்று ஃபரூக் அப்துல்லா பேசியிருக்கிறார். இதன்மூலம், தேசிய மாநாட்டு(என் சி) கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா அரபு நாடுகளுக்கு இன்று(ஜூன் 23) எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

“ஈரான் அணுசக்தி நாடாக மாறிவிடக்கூடாது என்பதே அமெரிக்காவின் நெடுங்கால கொள்கை.

மத்திய கிழக்கு ஆசியப் பிராந்தியத்திலுள்ள சன்னி பிரிவு நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால், அதனை வெளிப்படையாக எதிர்த்துப் பேசும் அளவுக்கு அவர்களுக்கு துணிச்சல் இல்லை.

இன்று, ஈரான் தாக்கப்பட்டுள்ளதாக அந்த நாடுகள்(அரபு நாடுகள்) நினைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்களுக்கொரு எச்சரிக்கையை நான் விடுக்கிறேன். ஒருநாள் இஸ்ரேல் உங்களையும் தாக்கும். ஏனெனில், உங்களிடமுள்ள பெரும் சொத்தான எண்ணெய் மற்றும் எரிவாயு அவர்களுக்கு தேவை. இவ்விவகாரத்தில் இஸ்ரேல் ஒரு பகடைக்காய் மட்டுமே. இதன் பின்னணியில் அமெரிக்காதான் நேரடியாகச் செயல்படுகிறது” என்றார்.

காஸாவில் சர்வதேச ஊடகங்களுக்குத் தடை விதிக்கும் இஸ்ரேல்!

உண்மையை மறைப்பதற்காக காஸாவில் சர்வதேச ஊடகங்களுக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரிட்டன் தேசிய செய்தித்தாளின் இளம் ஆசிரியராக இருந்த, அமெரிக்காவைச் சேர்ந்த பியர்ஸ் மோர்கன் இதனைத் த... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கான விமானங்களை ரத்து செய்தது பிரான்ஸ்!

ஈரான் உடன் போரில் ஈடுபட்டுள்ளதால் இஸ்ரேலுக்கு இயக்கப்படும் விமானங்களை ஜூலை 14ஆம் தேதி வரை ரத்து செய்வதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.இது குறித்து பேசிய பிரெஞ்சு ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்,... மேலும் பார்க்க

ஈரானைத் தொடர்ந்து கத்தாருக்கு அச்சுறுத்தலா?

கத்தாரில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் குடிமக்களுக்கு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருவதால், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், இது பதற்றமான சூழலை பிரதிபலிக்கவில்லை எனவும் கத்... மேலும் பார்க்க

ஈரானுக்கு உதவத் தயார்! அமெரிக்க தாக்குதலுக்கு கடும் கண்டனம்! - ரஷியா

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலுக்கு ரஷிய அதிபர் புதின் கடும் கண்டனம் தெரிவித்தார். ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரானின் ராணுவ, அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன்... மேலும் பார்க்க

பங்கர் பஸ்டர் வேஸ்ட்.. முன்பே வெளியேற்றப்பட்ட யுரேனியம்: டிரம்ப்புக்கு டஃப் கொடுக்கும் ஈரான்!

அமெரிக்கா, பங்கர் பஸ்டர் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவதற்கு முன்gபே, ஃபார்டவ் அணுசக்தி மையத்திலிருந்து 400 கிலோ கிராம் யுரேனியத்தை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டதாக ஈரான் கூறி வரும் நிலையில் அது ப... மேலும் பார்க்க

ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! புதினை சந்திக்கும் ஈரான் அமைச்சர்

ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரானின் ராணுவ, அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி தாக்குத... மேலும் பார்க்க