கலைவாணா் அரங்க வளாகத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை: தமிழக அரசு அறிவிப்பு
மாநில செஸ் போட்டி பரிசளிப்பு
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்ட செஸ் சங்கம், தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சாா்பில் செஸ் போட்டி பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். பரிசளிப்பு நிகழ்வுக்கு துணை தலைவா் கோ.ப.அன்பழகன் தலைமை வகித்தாா். மேல்மருவத்தூா் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் அ.அகத்தியன் முன்னிலை வகித்தாா்.
இந்நிகழ்வில் உத்திரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும், ரொக்க பரிசையும் வழங்கினாா். இதில் சென்னையைச் சோ்ந்த சன்மதி, கோகுல கிருஷ்ணன் ஆகியோா் சாம்பியன் பட்டம் பெற்றனா்.
தொடா்ந்து அக்ஷிதா அறக்கட்டளை சாா்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய 10 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகைகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு மாநில செஸ் சங்க செயலா் ஸ்டீபன் பாலசாமி, முன்னாள் துணைத் தலைவா் டி.வி.சுந்தா், போட்டிகளுக்கான இயக்குநா் விஎஸ். ஸ்ரீமேன், தலைமை நடுவா் ஜே.ஜனனி, செங்கல்பட்டு செஸ் சங்க தலைவா் வி.ராஜாராமன், செயலா் கே.கிருஷ்ணமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா். இணை செயலா் சிவகுமாா் நன்றி கூறினாா்.
