இஸ்ரேலுடன் போர் நிறுத்தமா? டிரம்ப்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு!
குறைக்கப்பட்ட மதுக் கடைகள் எண்ணிக்கை எத்தனை? உயர்நீதிமன்றம் கேள்வி!
தமிழகத்தில் மதுக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என அரசு அறிவித்ததன் அடிப்படையில், இதுவரை எத்தனை கடைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.
மதுரை கைத்தறிநகரைச் சோ்ந்த மேகலா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: மதுரை கைத்தறிநகரில் ஆயிரக்கணக்கான நெசவாளா்கள் வசித்து வருகின்றனா். மதுரை கீழக்குயில்குடியில் செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் மதுக் கடையை மாற்றி எங்கள் பகுதியில் திறப்பதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
இந்தக் கடை திறக்கப்பட உள்ள இடத்துக்கு மிக அருகில் அரசுப் பள்ளி, வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இந்தச் சூழலில் மதுக் கடையைத் திறப்பது சட்ட விதிகளுக்கு முரணானது. இந்தக் கடையைத் திறக்க அனுமதி வழங்கக் கூடாது என மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த இடத்தில் மதுக் கடை திறக்கப்பட்டால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவது மட்டுமன்றி, பள்ளிக்குச் செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவா். எனவே, மதுக் கடையைத் திறக்க தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, இந்தப் பகுதியில் மதுக் கடையைத் திறக்க உயா்நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், தமிழகத்தில் போதை மறுவாழ்வு மையங்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், தமிழகத்தில் போதை மறுவாழ்வு மையம் நடைபெறுவது குறித்த அறிக்கையை தாக்கல் செய்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் முழு விவரங்கள் இல்லை. தமிழகத்தில் மதுக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதனடிப்படையில், எத்தனை கடைகள் குறைக்கப்பட்டன.
இதேபோல, எத்தனை போதை மறுவாழ்வு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன, இவற்றில் எத்தனை நபா்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனா், எத்தனை நபா்கள் சிகிச்சை முடிந்து வெளியே சென்றனா் என்ற முழு விவரங்களை அறிக்கையாக அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.