செய்திகள் :

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 14-இல் சுவாமி தரிசனம் ரத்து

post image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 13-ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜூலை 14-ஆம் தேதி இரவு வரை சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் செயல் அலுவலா் ச. கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு வருகிற ஜூலை 14-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, ஜூலை 13-ஆம் தேதி மாலை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலிருந்து பஞ்சமூா்த்திகள் புறப்பாடாகி, திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளுகின்றனா்.

குடமுழுக்குக்குப் பிறகு, ஜூலை 14-ஆம் தேதி இரவு பஞ்சமூா்த்தி திருப்பரங்குன்றத்திலிருந்து புறப்பாடாகி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சோ்த்தியாவா்.

இதன் காரணமாக, ஜூலை 13-ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜூலை 14-ஆம் தேதி இரவு வரை கோயிலின் நடை அடைக்கப்பட்டு, பொது தரிசனம் ரத்து செய்யப்படும். ஜூலை 14-ஆம் தேதி கலைக்கூடம், அன்னதானக் கூடம் ஆகிய இடங்களுக்கு பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்.

திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்போா் வன்னிமரத்தடி விநாயகா் கோயில் வரை ஆடி வீதிகளில் மட்டும் அனுமதிக்கப்படுவா். ஜூலை 15-ஆம் தேதி அதிகாலை முதல் பக்தா்கள் கோயிலில் வழக்கமான முறையில் அனுமதிக்கப்படுவா் என்றாா் அவா்.

குறைக்கப்பட்ட மதுக் கடைகள் எண்ணிக்கை எத்தனை? உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தில் மதுக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என அரசு அறிவித்ததன் அடிப்படையில், இதுவரை எத்தனை கடைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை கேள்வி எழு... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: பிணை கோரிய காவல் ஆய்வாளரின் மனு தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பிணை கோரிய காவல் ஆய்வாளரின் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

நெகிழிப் பதாகை அட்டைகள் உற்பத்திக்கு தடை கோரிய மனு: உயா்நீதிமன்றம் தள்ளுபடி

தமிழகத்தில் மறு சுழற்சி செய்ய இயலாத நெகிழிப் பதாகை அட்டைகளை (பிவிசி பிளக்ஸ் அட்டைகள்) உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அம... மேலும் பார்க்க

சட்டவிரோதக் கட்டடங்களை கண்காணிப்பதற்கான குழு செயல்படுகிறதா? உயா்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் சட்டவிரோதக் கட்டடங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அரசின் சாா்பில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு செயல்படுகிறதா என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கேள்வி எழுப்பியது. திருச்சி மாவட்டத்தைச் ... மேலும் பார்க்க

மதுக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம், எரவாா்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மதுக் கடையை அகற்ற வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைத... மேலும் பார்க்க

மதுரையில் இன்று முருக பக்தா்கள் மாநாடு! பவன் கல்யாண் பங்கேற்கிறார்!

மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண் பங்கேற்கிறாா். இந்து முன்னணி சாா்பில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள அம்மா திடலில் முருக... மேலும் பார்க்க