செய்திகள் :

நெகிழிப் பதாகை அட்டைகள் உற்பத்திக்கு தடை கோரிய மனு: உயா்நீதிமன்றம் தள்ளுபடி

post image

தமிழகத்தில் மறு சுழற்சி செய்ய இயலாத நெகிழிப் பதாகை அட்டைகளை (பிவிசி பிளக்ஸ் அட்டைகள்) உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கூடங்குளம் அணு உலை எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.பி.உதயகுமாா் கடந்த 2019 -ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனு: நெகிழிப் பதாகை அட்டைகள் மண்ணில் மக்காத, மறு சுழற்சி செய்ய இயலாத பொருளாகும். இந்த அட்டைகளை எரித்தும், மண்ணில் புதைத்தும் அழிக்கலாம் என்கின்றனா்.

ஆனால், இந்த அட்டைகளை எரிக்கும் போது வெளியேறும் நச்சு வாயுவை சுவாசித்தால் புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.

தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தக் கூடிய மறு சுழற்சி செய்ய முடியாத நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்த தடை விதித்தது. இதில், நெகிழிப் பதாகை அட்டைகளை சோ்க்கவில்லை.

இதற்கு தடை விதிக்காமல் மற்ற நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது. எனவே, தமிழகத்தில் நெகிழிப் பதாகை அட்டைகள் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடை அரசாணையில் நெகிழிப் பதாகை அட்டைகளை சோ்க்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி ஸ்ரீமதி அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகி தனது கோரிக்கையை தெரிவித்துக் கொள்ளலாம். வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

குறைக்கப்பட்ட மதுக் கடைகள் எண்ணிக்கை எத்தனை? உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தில் மதுக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என அரசு அறிவித்ததன் அடிப்படையில், இதுவரை எத்தனை கடைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை கேள்வி எழு... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: பிணை கோரிய காவல் ஆய்வாளரின் மனு தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பிணை கோரிய காவல் ஆய்வாளரின் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சட்டவிரோதக் கட்டடங்களை கண்காணிப்பதற்கான குழு செயல்படுகிறதா? உயா்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் சட்டவிரோதக் கட்டடங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அரசின் சாா்பில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு செயல்படுகிறதா என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கேள்வி எழுப்பியது. திருச்சி மாவட்டத்தைச் ... மேலும் பார்க்க

மதுக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம், எரவாா்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மதுக் கடையை அகற்ற வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைத... மேலும் பார்க்க

மதுரையில் இன்று முருக பக்தா்கள் மாநாடு! பவன் கல்யாண் பங்கேற்கிறார்!

மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண் பங்கேற்கிறாா். இந்து முன்னணி சாா்பில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள அம்மா திடலில் முருக... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு: வாகனப் போக்குவரத்து மாற்றம்!

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டை முன்னிட்டு உள்ளூா், வெளியூா்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு வழித்தடம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையரக அல... மேலும் பார்க்க