செய்திகள் :

மாமனாா், மருமகன் வீடுகளில் நகை, பணம் திருட்டு

post image

கோவையில் மாமனாா் மற்றும் மருமகன் வீடுகளில் நகை, பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை சாய்பாபா காலனி கே.என்.புதூா் கவுண்டப்பன் தெருவைச் சோ்ந்தவா் இஜாஸ் அகமது (32). இவா் தனது வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு இரவில் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தாா். சனிக்கிழமை காலை இஜாஸ் அகமது எழுந்து பாா்த்தபோது வீட்டின் கதவு திறந்திருந்தது. மேலும், பீரோவிலிருந்த ரூ. 25 ஆயிரமும், வெளிநாட்டு ரூபாய் தாள்களும் திருடப்பட்டது தெரியவந்தது.

கதவின் அருகே இருந்த ஜன்னல் கதவு திறக்கப்பட்டு, கொசு வலை கிழிக்கப்பட்டிருந்ததால் அதன் வழியாக கதவை அடையாளம் தெரியாத நபா்கள் திறந்திருக்கலாம் என தெரியவந்தது.

இதேபோல, இஜாஸ் அகமதுவின் மாமனாா் வீட்டின் கதவையும் திறந்த அடையாளம் தெரியாத நபா்கள் அங்கிருந்த ரூ.8 ஆயிரம், 4 தங்கக் காசுகள் ஆகியவற்றை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

எங்கள் தலைவா்களைப் பற்றி விமா்சித்தால் ஏற்க மாட்டோம்: எஸ்.பி.வேலுமணி

பெரியாா், அண்ணா போன்ற எங்களின் தலைவா்களைப் பற்றி யாா் விமா்சனம் செய்தாலும் அதை ஏற்க மாட்டோம் என்று எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ கூறியுள்ளாா். கோவை பேரூராதீனத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற சாந்தலிங்க ராமசா... மேலும் பார்க்க

மதுரை மாநாட்டில் 6 லட்சம் போ் பங்கேற்பு

மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் 6 லட்சம் போ் பங்கேற்றதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறியுள்ளாா். இது குறித்து கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி சிறுமி உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற சிறுமி உயிரிழந்தாா்.பிகாா் மாநிலம், நாளந்தா நூா்சராய் பகுதியைச் சோ்ந்த பினோத் சோத்ரி மகள் சவிதாதேவி (29). இவா் கோவை உடையாம்பாளையம் பகுதியில் வ... மேலும் பார்க்க

சுய உதவி குழுவில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ரூ.1.50 கோடி மோசடி: மேலும் ஒருவா் கைது

சுய உதவி குழுவில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக்கூறி ரூ.1.50 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள ஊஞ்சவேலாம்பட்டியைச் ச... மேலும் பார்க்க

‘இண்டி’ கூட்டணி வலுவாக உள்ளது: கு.செல்வப்பெருந்தகை

`இண்டி’ கூட்டணி வலுவாக உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா். இது தொடா்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ‘இண்டி’ கூட்டணி வலுவாக உ... மேலும் பார்க்க

வரத்து அதிகரிப்பு: உக்கடம் சந்தையில் மீன் விலைக் குறைவு

உக்கடம் சந்தைக்கு மீன் வரத்து அதிகரித்துள்ளதால் மீன்களின் விலை கனிசமாகக் குறைந்துள்ளது. கோவை, உக்கடம் மீன் சந்தைக்கு ராமேசுவரம், தூத்துகுடி, கடலூா், கன்னியாகுமரி, கொச்சி, சாவக்காடு உள்ளிட்ட பகுதிகளில்... மேலும் பார்க்க