செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள்
தமிழகத்தில் செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் திங்கள்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்):
அருண்ராஜ் - பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் (செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா்), நாரணவரே மனிஷ் - திருப்பூா் மாவட்ட ஆட்சியா் (ஈரோடு மாநகராட்சி முன்னாள் ஆணையா்), வெ.சரவணன் - திருச்சி மாவட்ட ஆட்சியா் (திருச்சி மாநகராட்சி ஆணையா்), சி.சினேகா - செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் (தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் செயல் இயக்குநா்), கே.ஜே.பிரவீன்குமாா் - மதுரை மாவட்ட ஆட்சியா் (பெருநகர சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையா் - மத்தியம்), என்.ஓ.சுகபுத்ரா - விருதுநகா் மாவட்ட ஆட்சியா் (திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா்), ச.கந்தசாமி - ஈரோடு மாவட்ட ஆட்சியா் (ஆவடி மாநகராட்சி ஆணையா்), துா்கா மூா்த்தி - நாமக்கல் மாவட்ட ஆட்சியா் (தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா்), கா.பொற்கொடி - சிவகங்கை மாவட்ட ஆட்சியா் (ஆவின் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குநா்).