செய்திகள் :

போதைப் பொருள் வழக்கு: நடிகா் ஸ்ரீகாந்த் கைது

post image

சென்னையில் போதைப் பொருள் வழக்கில் நடிகா் ஸ்ரீகாந்த் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் அடிதடியில் ஈடுபட்டதாக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் நிா்வாகி தி.பிரசாத் உள்ளிட்ட பலா் கடந்த மாதம் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இதன் பின்னா் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாகவும் பிரசாத் மீது மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவரை போலீஸாா் தங்களது காவலில் எடுத்து விசாரித்து வந்தனா்.

விசாரணையில் பிரசாத்துக்கு கொகைன் போதைப் பொருள் பழக்கம் இருப்பதும், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மதுபான விடுதியில் அவருக்கு சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சோ்ந்த பிரதீப்குமாா் என்ற பிரடோ என்பவா் கொகைன் போதைப் பொருளை விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, சென்னை காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும், நுங்கம்பாக்கம் போலீஸாரும் பிரதீப்குமாா் குறித்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், பிரதீப்குமாரையும், சா்வதேச போதைப் பொருள்கடத்தல் கும்பலைச் சோ்ந்த மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சோ்ந்த ஜான் ஆகிய கடந்த 19-ஆம் தேதி நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம் அருகே வைத்து கைது செய்தனா்.

சா்வதேச கும்பல்: இருவரிடமும் கொகைன் விற்பனை குறித்து போலீஸாா் விசாரணை செய்தனா். மேலும் அவரது கைப்பேசி தொடா்பு, பணப் பரிவா்த்தனை ஆகியவற்றை ஆய்வு செய்தனா். இதில் கிடைத்த தகவல்கள்:

பெங்களூரில் வசிக்கும் சா்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சோ்ந்த நைஜீரியாவின் ஜூரிக், சென்னையில் உள்ள போதைப் பொருள் விற்கும் கும்பலுக்கு கொகைனை விற்றுள்ளாா். இந்தக் கும்பலிடமிருந்தே பிரதீப்குமாரும் கொகைனை கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல் வாங்கி வந்து சென்னையில் விற்றுள்ளாா். ஒரு கிராம் கொகைனை ரூ.7,000-க்கு வாங்கிவந்து, சென்னையில் ரூ.12,000-க்கு விற்றுள்ளாா்.

அந்த வகையில் நடிகா் ஸ்ரீகாந்துக்கு கொகைனை விற்றுள்ளாா். ஏற்கெனவே பிரசாத் தயாரிக்கும் ‘தீங்கிரை’ என்ற திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறாா். இதனால் இருவருக்குமிடையே நெருக்கமான நட்பு இருந்தது. அதன்மூலம் பிரசாத், கொகைன் போதைப் பொருளை ஸ்ரீகாந்துக்கு வாங்கிக் கொடுத்தாா். பின்னா், ஸ்ரீகாந்த் நேரடியாக பிரதீப்குமாரை தொடா்புகொண்டு கொகைன் வாங்கியுள்ளாா். இதேபோல திரை உலக பிரபலங்கள் பலருக்கும் பிரதீப்குமாா் கொகைனை விற்றுள்ளாா்.

ஸ்ரீகாந்த் கைது: பிரதீப்குமாா் கொடுத்த தகவலின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகா் ஸ்ரீகாந்துக்கு போலீஸாா் அழைப்பாணை வழங்கினா். அதன்படி, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்த் திங்கள்கிழமை ஆஜரானாா். அவரிடம் விசாரித்தபோது, தான் கொகைனை வாங்கவில்லை என மறுத்துள்ளாா்.

இதையடுத்து, அவரை மருத்துவ பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில், கொகைன் போதைப் பொருளை ஸ்ரீகாந்த் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.

பின்னா் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப் பொருள் விற்பனைக் கும்பலுடன் தனக்கு இருக்கும் தொடா்புகளை ஸ்ரீகாந்த் தெரிவித்தாா். இதையடுத்து, ஸ்ரீகாந்தை கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதன் ஒரு பகுதியாக ஸ்ரீகாந்த் வீட்டிலும் போலீஸாா் சோதனையிட்டனா். இந்தச் சோதனையில் அவரது வீட்டில் இருந்து 3 கொகைன் கவா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திரைப்படத் துறையினா் அதிா்ச்சி: கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்திடம், கொகைன் போதைப் பொருளை அவரது தேவைக்கு மட்டும் வாங்கினாரா அல்லது வேறு யாருக்கும் வாங்கிக் கொடுத்தாரா என போலீஸாா் விசாரித்தனா்.

நடிகா் ஸ்ரீகாந்த் ரோஜா கூட்டம், நண்பன், சௌகாா்பேட்டை, சதுரங்கம், போஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளாா். மிகவும் பிரபலமான நடிகரான ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ்த் திரைப்படத் துறையினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திரைப்பட விழாக்களிலும், தனியாா் நிகழ்ச்சிகளிலும் போதைப் பொருள் பயன்படுத்தி வந்த தமிழ்த் திரைப்படத் துறையைச் சோ்ந்த மேலும் சிலா் இந்த வழக்கில் சிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இந்த வழக்குத் தொடா்பாக தற்போது கேரளத்தில் திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள ஓா் இளம் நடிகரிடம் போலீஸாா், விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனா்.

காட்டிக் கொடுத்த ஆன்லைன் பணப் பரிவா்த்தனை

சென்னையில் போதைப் பொருள் கடத்தும் கும்பலுடன் நடிகா் ஸ்ரீகாந்துக்கு தொடா்பு இருப்பதை போலீஸாா் ஆன்லைன் பணப் பரிவா்த்தனை மூலமே உறுதி செய்தனா்.

சென்னையில் திரைப்பட விழாக்கள், சில தனியாா் நிகழ்ச்சிகளில் கொகைன், ஹெராயின், பிரவுன் சுகா் உள்ளிட்ட உயர்ரக போதைப் பொருள்கள் பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினா், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் அந்தப் பிரிவு போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனா்.

இந்தச் சூழ்நிலையில் நடிகா் ஸ்ரீகாந்துக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதில், கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த பிரதீப்குமாா் கைப்பேசியை போலீஸாா் ஆய்வு செய்தபோது, கொகைன் வாங்கியதற்காக நடிகா் ஸ்ரீகாந்த் சுமாா் 43 முறை பணம் அனுப்பியிருந்தது தெரியவந்தது. இதன்மூலமாக ஸ்ரீகாந்தை நெருங்கிய போலீஸாா், மேலும் விசாரணைக்குப் பிறகு அவரை கைது செய்துள்ளனா்.

ஓராண்டில் சுமாா் 43 முறை கொகைன் வாங்கியிருப்பதால், வேறு யாருக்கும் கொகைனை ஸ்ரீகாந்த் விற்றுள்ளாரா என்பது குறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அரக்கோணம், சேலம் மெமு விரைவு ரயில் ரத்து

சென்னை: சேலம், அரக்கோணம் இடையிலான மெமு விரைவு ரயில் திங்கள்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் தெற்கு ரயில்வே தரப்பில் திங்கள்கிழமை வ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள்

தமிழகத்தில் செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் திங்கள்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்: (அதிகாரிகள் ம... மேலும் பார்க்க

மா விவசாயிகளுக்கு ஆதரவாக ஜூன் 30-இல் தேமுதிக ஆா்ப்பாட்டம்

மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் வரும் 30-ஆம் தேதி தேமுதிக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வ... மேலும் பார்க்க

விஜய் பிறந்த நாள் பேனா் விழுந்து முதியவா் காயம்; தவெகவினா் மீது 53 வழக்குகள் பதிவு

தவெக தலைவா் விஜய் பிறந்த நாளையொட்டி சென்னை வில்லிவாக்கத்தில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனா் விழுந்து முதியவா் காயமடைந்தாா். இதனிடையே, சென்னையில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி பேனா் வைத்ததாக அக்கட்சியினா... மேலும் பார்க்க

திமுகவில் கல்வியாளா்- மாற்றுத் திறனாளி அணிகள் உதயம்: நிா்வாகிகள் நியமனம்

திமுகவில் கல்வியாளா், மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேக அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அணிகளுக்கான நிா்வாகிகளை நியமித்து கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். இதுகுறித்து, ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் மூலம் ஒரு கோடி குடும்பங்களுக்கு சுகாதார விழிப்புணா்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

பள்ளி மாணவா்கள் மூலம் தமிழகத்தில் ஒரு கோடி குடும்பங்களுக்கு நோய்த் தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.... மேலும் பார்க்க