செய்திகள் :

தஞ்சாவூர்: ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நெஞ்சுவலியால் உயிரிழந்த அதிகாரி.. என்ன காரணம்?

post image

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் நேற்று மாலை சட்டம், ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர், சீனிவாசபுரம் அருகே உள்ள சேவப்பநாயக்கன்வாரி பகுதியை, சேர்ந்தவர் தெய்வபாலன் (54). இவர் தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராகப் (இடைநிலை) பணியாற்றி வந்தார்.

உயிரிழந்த தெய்வபாலன்

இக்கூட்டத்தில் தெய்வபாலன் கலந்துக்கொண்டார். அப்போது, தெய்வபாலன் தனக்கு உள்ளுக்குள் ஏதோ செய்கிறது, தண்ணீர் குடிக்க வேண்டும் என்றவர் தரைதளத்திற்கு இறங்கி வந்துள்ளார். அவருடன் சக ஊழியர்கள் சிலரும் வந்துள்ளனர். தண்ணீர் குடித்த தெய்வபாலன் போர்டிகோ படியில் சில நிமிடங்கள் அமர்ந்திருந்துள்ளார். பின்னர் மீண்டும் அவரை முதல் தளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அவர் மயக்கம் போட்டு விழுந்து விட்டார் அதிர்ச்சியடைந்த அலுவலர்கள் அவரை காரில் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். காரில் செல்லும் போதே நெஞ்சு பகுதி மற்றும் முதுகிலும் அழுத்தியுள்ளனர் ஆனால் தெய்வபாலனிடம் எவ்வித அசைவும் இல்லை. தெய்வபாலனை பரிசோதித்த டாக்டர்கள் நெஞ்சு வலி ஏற்பட்டு ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நெஞ்சு வலி (சித்திரிப்பு படம்)

இது குறித்து அரசு அலுவலர்கள் சிலரிடம் பேசினோம், "அரசு அலுவலர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. இதனால் பெரும்பாலான அலுவலர்கள் மன உளைச்சல் அடைவதாக சொல்லப்படுகிறது.

நேர்முக உதவியாளரான தெய்வபாலனும் பணி சுமை இருப்பதாக சக அலுவலர்களிடத்தில் பேசி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட தெய்வபாலன் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்திருக்கிறார். நான்கு மணி வரை எல்லோருடன் சகஜமாக பேசிக்கொண்டிருந்தவரின் உடல் 5 மணியளவில் உடற்கூறாய்வுக்காக மார்ச்சுவரியில் கிடத்தப்பட்டு கிடந்ததை யாராலும் நம்ப முடியவில்லை" என்று சக ஊழியர்கள் புலம்பினர்.

"மகாராஷ்டிரா பள்ளிகளில் மராத்தி மட்டுமே கட்டாயம்; இந்தி கட்டாயமல்ல" - மகா. பாஜக அமைச்சர்

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையையும், அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கையும் தமிழ்நாட்டில் பெரும் விவாதப்பொருளாகியிருந்தது. கடந்த நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்... மேலும் பார்க்க

Israel - Iran: ``மீண்டும் தெளிவாக சொல்கிறோம்..'' - போர்நிறுத்தம் குறித்து பேசிய ஈரான்

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து வருவதால், இரு நாடுகளுக்கு இடையேயிலான மோ... மேலும் பார்க்க

Israel - Iran: போர்நிறுத்தை அறிவித்த ட்ரம்ப்; 12 நாள்களைக் கடந்தும் தொடரும் தாக்குதல்கள்..

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து வருவதால், இரு நாடுகளுக்கு இடையேயிலான மோ... மேலும் பார்க்க

மேற்குவங்க இடைத்தேர்தல் TMC வெற்றிக் கொண்டாட்டத்தில் சிறுமி உயிரிழிப்பு; மம்தா பானர்ஜி வருத்தம்

மேற்கு வங்காளம் - காளிகஞ்ச், கேரளா - நிலம்பூர், குஜராத் - விசாவதர், குஜராத் - கடி, பஞ்சாப் - லூதியானா மேற்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலுக்கான முடிவுகள் இன்று (ஜூன் 23) வெளியாகின. பஞ்சாப்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்லும் மாணவர்கள்... கண்டுகொள்ளுமா அரசு?

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த சில வாரங்களாக இரவு பகல் பாராமல் பரவலாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் சங்கராபுரம் அருகே உள்ள முஸ்கந்தா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட... மேலும் பார்க்க

US Attack On Iran: ஈரானில் தாக்குதல் நடத்த அமெரிக்கா பயன்படுத்திய 'GBU 57' என்றால் என்ன?

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் மூன்று முக்கிய அணு உலைகளை அமெரிக்கா குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது.இந்தத் தாக்குதல் பற்றி பெருமையாகப் பேசி வருகிறார் டொனால... மேலும் பார்க்க