செய்திகள் :

Israel - Iran: போர்நிறுத்தை அறிவித்த ட்ரம்ப்; 12 நாள்களைக் கடந்தும் தொடரும் தாக்குதல்கள்..

post image

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து வருவதால், இரு நாடுகளுக்கு இடையேயிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் போர்டோ, நடான் மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி உடனடியாக கொடுக்கப்படும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் நாடு ஏவுகணை தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளது.

கத்தார் நாட்டில் கணிசமாக இந்தியர்கள் இருப்பதால், 'கத்தாரில் உள்ள இந்தியர்கள் வீட்டிற்குள்ளே பத்திரமாக இருக்க வேண்டும்' என இந்திய தூதரகம் அறிவித்திருக்கிறது.

இப்படியாக கடந்த 12 நாள்கள் தாக்குதல்கள் தீவிரமடைந்த இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "கடந்த 12 நாள்கள் நடைபெற்ற போரில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இரு நாடுகளும் தங்களின் உறுதிப்பாடு, தைரியத்தை வெளிப்படுத்தின. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இரு நாடுகளுக்கிடையே போர்நிறுத்தத்தை அறிவிக்கிறேன்" என்று தனது ட்ரூத் சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இருப்பினும் ட்ரம்ப்பின் இந்த போர் நிறுத்த அறிவிப்பை இருநாடுகளும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் - ஈரான் இருநாடுகளும் எந்தவொரு அறிவிப்பையும் அறிவிக்கவிலை. இருநாடுகளுக்கிடையேயான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

'இஸ்ரேல் தரப்பில் தாக்குதல் நடத்தினால் அதற்கான பதிலடியை கொடுப்போம்' என்பதே ஈரானின் நிலைப்பாடாக இருக்கிறது.

"மகாராஷ்டிரா பள்ளிகளில் மராத்தி மட்டுமே கட்டாயம்; இந்தி கட்டாயமல்ல" - மகா. பாஜக அமைச்சர்

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையையும், அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கையும் தமிழ்நாட்டில் பெரும் விவாதப்பொருளாகியிருந்தது. கடந்த நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்... மேலும் பார்க்க

Israel - Iran: ``மீண்டும் தெளிவாக சொல்கிறோம்..'' - போர்நிறுத்தம் குறித்து பேசிய ஈரான்

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து வருவதால், இரு நாடுகளுக்கு இடையேயிலான மோ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நெஞ்சுவலியால் உயிரிழந்த அதிகாரி.. என்ன காரணம்?

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் நேற்று மாலை சட்டம், ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவ... மேலும் பார்க்க

மேற்குவங்க இடைத்தேர்தல் TMC வெற்றிக் கொண்டாட்டத்தில் சிறுமி உயிரிழிப்பு; மம்தா பானர்ஜி வருத்தம்

மேற்கு வங்காளம் - காளிகஞ்ச், கேரளா - நிலம்பூர், குஜராத் - விசாவதர், குஜராத் - கடி, பஞ்சாப் - லூதியானா மேற்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலுக்கான முடிவுகள் இன்று (ஜூன் 23) வெளியாகின. பஞ்சாப்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்லும் மாணவர்கள்... கண்டுகொள்ளுமா அரசு?

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த சில வாரங்களாக இரவு பகல் பாராமல் பரவலாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் சங்கராபுரம் அருகே உள்ள முஸ்கந்தா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட... மேலும் பார்க்க

US Attack On Iran: ஈரானில் தாக்குதல் நடத்த அமெரிக்கா பயன்படுத்திய 'GBU 57' என்றால் என்ன?

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் மூன்று முக்கிய அணு உலைகளை அமெரிக்கா குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது.இந்தத் தாக்குதல் பற்றி பெருமையாகப் பேசி வருகிறார் டொனால... மேலும் பார்க்க