செய்திகள் :

தஞ்சாவூர்: ”உன்னால் எங்க நிம்மதி போச்சு” - போதையில் தகராறு செய்த கணவன்; கத்தியால் குத்தி கொன்ற மனைவி

post image

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள எருமைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (45). இரவது மனைவி சிந்தனை செல்வி (25).

இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கொத்தனார் வேலை செய்து வந்த கலியமூர்த்திக்குக் குடிப்பழக்கம் இருந்துள்ளது.

வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பும்போது தினமும் குடித்து விட்டு வந்து சிந்தனை செல்வியிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.

கணவனை கொலை செய்த மனைவி
கணவனை கொலை செய்த மனைவி

பல சமயம் சண்டை எல்லை மீற கலியமூர்த்தி போதையில், சிந்தனை செல்வியை அடித்து உதைப்பாராம். தெருவில் உள்ளவர்கள் இதைத் தட்டிக் கேட்டால் அவர்களையும் தகாத வார்த்தைகளில் திட்டுவாராம்.

இந்தநிலையில் கடந்த 22ம் தேதி இரவு வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த கலியமூர்த்தி தன் மனைவி சிந்தனை செல்வியை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார். வலி தாங்க முடியாமல் அவர் கதறியிருக்கிறார்.

"உன்னால எனக்கும், பிள்ளைகளுக்கும் நிம்மதியே இல்லாமல் போச்சு, தினம் தினம் உங்கிட்ட கொடுமையை அனுபவிக்க முடியலை. நீ திருந்துவனு பார்த்தேன். ஆனால் திருந்துறது மாதிரி தெரியலை" என்று சிந்தனை செல்வி பேசியுள்ளார்.

அப்போதும் கலியமூர்த்தி அடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்தவர் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து, "இனிமே குடிப்பியா, பிரச்னை செய்வீயா" என்று கேட்டு, கலியமூர்த்தி கழுத்தில் குத்தியுள்ளார்.

murder
murder

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கலியமூர்த்தி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் சிந்தனை செல்வியைக் கைது செய்தனர்.

கணவன் இறந்து விட்டார், மனைவி சிறையில் இருக்கிறார். தற்போது அவர்களின் பிள்ளைகள் இரண்டு பேரின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மதுரை: பட்டியலினப் பெண் அரசு ஊழியர் தற்கொலை; சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகக் காதல் கணவர் மீது புகார்

காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினப் பெண் அரசு ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது கணவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்ப... மேலும் பார்க்க

நெல்லை: காங். தலைவர் ஜெயகுமார் மரண வழக்கு; 400 நாள்களைக் கடந்து நீடிக்கும் மர்மம்; திணறும் போலீஸார்

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகிலுள்ள கரைசுத்துப்புதூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்தார். இவர், கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி வீட்டை வி... மேலும் பார்க்க

வேலூர்: மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட இலவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி மணிவண்ணன் (வயது 49). கடந்த 2019-ம் ஆண்டு, 20 வயது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வீட்டில் தனியாக... மேலும் பார்க்க

ஆப்பிரிக்கா டு மும்பை; வயிற்றில் கடத்திவரப்பட்ட aரூ.10 கோடி கொக்கைன்... சோதனையில் சிக்கிய நபர்!

மும்பைக்கு வயிற்றில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து இருக்கிறது. வயிற்றில் போதைப்பொருளை எடுத்து வரும்போது அது தொடர்பாக முன்கூட்டியே விமான நிலைய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரி... மேலும் பார்க்க

மும்பை: குப்பைத் தொட்டி அருகே மீட்கப்பட்ட மூதாட்டி; விட்டுச் சென்ற பேரன் குறித்து போலீஸ் விசாரணை!

மும்பை கோரேகாவ் ஆரே காலனி பகுதியில் குப்பை தொட்டி அருகில் வயதான மூதாட்டி ஒருவர் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. உடனே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸார் வந்தபோது 60 முதல் 70 வயது... மேலும் பார்க்க

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த்திடம் போலீஸார் விசாரணை; வளையத்தில் மேலும் ஒரு நடிகர்!?

தமிழ் சினிமாவில் `ரோஜா கூட்டம்', `மனசெல்லாம்', `பார்த்திபன் கனவு', `நண்பன்' உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்படுத்தியாக சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் அவரை விசாரித்த... மேலும் பார்க்க