செய்திகள் :

மும்பை: குப்பைத் தொட்டி அருகே மீட்கப்பட்ட மூதாட்டி; விட்டுச் சென்ற பேரன் குறித்து போலீஸ் விசாரணை!

post image

மும்பை கோரேகாவ் ஆரே காலனி பகுதியில் குப்பை தொட்டி அருகில் வயதான மூதாட்டி ஒருவர் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. உடனே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸார் வந்தபோது 60 முதல் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி குப்பை தொட்டி அருகில் குப்பைகளோடு குப்பைகளாக படுத்து இருந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தது. உடனே போலீஸார் மூதாட்டியை அங்கிருந்து தூக்கி போலீஸ் வேனில் வைத்தனர். அவரை அங்கிருந்து ஜோகேஸ்வரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு போதிய வசதிகள் இல்லை என்று கூறி மூதாட்டியை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டனர். இதையடுத்து கூப்பர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கேயும் சேர்த்துக்கொள்ள மறுத்தனர். இறுதியில் போலீஸார் மாலை வரை போராடி டாக்டர்களிடம் பேசி அவரை கூப்பர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீஸார் அப்பெண்ணிடம் விசாரித்தபோது அவரது பெயர் யசோதா கெய்க்வாட் என்று தெரிய வந்தது. அவரை அவரது பேரன் கொண்டு வந்து குப்பை தொட்டி அருகில் போட்டுவிட்டு சென்றதாக தெரிவித்தார். மூதாட்டிக்கு தோல் புற்று நோய் இருக்கிறது. யசோதா இரண்டு முகவரிகளை கொடுத்துள்ளார். அதில் சென்று விசாரித்தபோது யசோதாவை யாராலும் அடையாளம் காணமுடியவில்லை. மூதாட்டி கிடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராவும் இல்லை. ஆனாலும் ஆரே காலனி பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அதோடு மூதாட்டியின் புகைப்படத்தை மும்பையில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் அனுப்பி அவரது உறவினர்களை கண்டுபிடிக்கும்படி போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். பொதுமக்களும் மூதாட்டி குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆப்பிரிக்கா டு மும்பை; வயிற்றில் கடத்திவரப்பட்ட aரூ.10 கோடி கொக்கைன்... சோதனையில் சிக்கிய நபர்!

மும்பைக்கு வயிற்றில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து இருக்கிறது. வயிற்றில் போதைப்பொருளை எடுத்து வரும்போது அது தொடர்பாக முன்கூட்டியே விமான நிலைய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரி... மேலும் பார்க்க

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த்திடம் போலீஸார் விசாரணை; வளையத்தில் மேலும் ஒரு நடிகர்!?

தமிழ் சினிமாவில் `ரோஜா கூட்டம்', `மனசெல்லாம்', `பார்த்திபன் கனவு', `நண்பன்' உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்படுத்தியாக சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் அவரை விசாரித்த... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில்: பாஜக எம்எல்ஏ-க்கு சீட் கொடுக்க மறுத்தவர் மீது தாக்குதல்.. உ.பி.,யில் அதிர்ச்சி

நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் குறுகிய தூரத்திற்குள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் இருக்கை வசதி மட்டுமே இருக்கிறது. அடுத்த கட்டமாக படுக்கை வசதியுடன் கூடிய வந்தே ... மேலும் பார்க்க

``நீட் மதிப்பெண் குறைந்து விட்டது'' - மகளை அடித்தே கொன்ற ஆசிரியர்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை அவரது தந்தை அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா சாங்கிலி மாவட்டத்தில் உள்ள நெல்கரஞ்சி என்ற கிராமத்தை சேர்ந்... மேலும் பார்க்க

ஜெகன் மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கி உயிரிழந்த தொண்டர் - என்னென்ன பிரிவுகளில் வழக்கு?

கடந்த ஜூன் 18-ம் தேதி, ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ரெண்டபல்லா எனும் கிராமத்திற்கு சென்றிருக்கிறார். ஒரு ஆண்டிற்கு முன்பு, தற்கொலை செய்துகொண்ட தன் கட்சி தலைவர் ஒருவரின் குடும்பத்தை ... மேலும் பார்க்க

ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பெண்; அவமானப்படுத்திய கும்பல்? - விபரீத முடிவெடுத்த பெண்

கேரள மாநிலம் கண்ணூர் காயலோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஷீதா(40). இவர் கடந்த 17-ம் தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலின்பேரில் அங்குசென்ற பினராயி காவல்நிலை... மேலும் பார்க்க