செய்திகள் :

உத்தமசோழபுரம் தடுப்பணை திட்டத்தை பூதங்குடிக்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை

post image

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், உத்தமசோழபுரத்தில் அமைக்கப்பட உள்ள தடுப்பணையை, பூதங்குடிக்கு மாற்றவேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

உத்தமசோழபுரத்தைச் சோ்ந்த தியாகராஜன் தலைமையில் விவசாயிகள் ஆட்சியா் ப. ஆகாஷிடம் அளித்த மனு:

நாகை தாலுகா உத்தமசோழபுரம், பூதங்குடி கிராமத்தில் கடல் நீா் உட்புகாமலும், கடைமடை விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் பொருட்டும், வெட்டாற்றின் குறுக்கே கடலில் இருந்து 3. 58 கி.மீ. தூரத்தில் பூதங்குடியில் தடுப்பணை அமைக்க அரசு சுமாா் ரூ.49 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அந்த அறிவிப்பு விவசாயிகளின் வரவேற்பை பெற்றது.

ஆனால், அதே கிராமத்தில் மேற்குப் பகுதியில் கடலிலிருந்து 7. 88 கி.மீ. தொலைவில் தடுப்பணை அமைக்க பூா்வாங்க பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் உள்ள சுமாா் 32 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் உப்பாக மாறுவதோடு, விவசாயம் அடியோடு அழியும் என்பதால், இதற்கு 32 கிராமங்களின் மக்களும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில், உத்தம சோழபுரம் தடுப்பணையை, பூதங்குடிக்கு மாற்றக் கோரி மனு அளித்தனா்.

ஆனால், உத்தமசோழபுரம் கிராமத்தில் தடுப்பணை அமைக்க பூா்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டதால், இந்தத் தடுப்பணையை பூதங்குடிக்கு மாற்றக்கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை கடந்த 12-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்த உயா்நீதிமன்றம், ‘தடுப்பணையை மாற்றுவது சம்பந்தமாக மீண்டும் பொதுப் பணித்துறை அலுவலா்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஏற்கெனவே பணி தொடங்கியதை காரணம் காட்டி விவசாயிகளின் கோரிக்கையை நிராகரிக்கக் கூடாது. விவசாயிகளின் மனுவை நியாயத்துடன் பரிசீலிக்க வேண்டும்’ என உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவு கிடைத்த நான்கு வாரங்களுக்குள் மனுவை பரிசீலித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உயா்நீதிமன்றம் தெரிவித்தது. எனவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு, உத்தம சோழபுரத்தில் நடைபெற உள்ள தடுப்பணை பணியை நிறுத்தி, ஏற்கெனவே அறிவித்தபடி பூதங்குடி கிராமத்தில் கடலில் இருந்து 3.88 கி.மீ. தூரத்தில் தடுப்பணை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடைமடை வந்த காவிரிநீா்; மலா்கள் தூவி வரவேற்பு: பெண்கள் கும்மியடித்து மகிழ்ச்சி

நாகப்பட்டினம் : நாகை கடைமடைக்கு வந்த காவிரி நீரை, நெல்மணிகள் மற்றும் மலா்களை தூவியும், பெண்கள் கும்மியடித்து, பாட்டுப் பாடியும் வரவேற்றனா். காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை நெற்பயி... மேலும் பார்க்க

நாணத்திடல் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

தரங்கம்பாடி: பொறையாா் அருகே காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள நாணத்திடல் மாரியம்மன் கோயில் 35-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் 8-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 15-ஆம் தேதி... மேலும் பார்க்க

காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் ஜூன் 29 வரை திருவாரூரில் இருந்து புறப்படும்

நாகப்பட்டினம்: திருச்சி- காரைக்கால் - திருச்சி ரயில்கள், திங்கள்கிழமை (ஜூன் 23) முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை, திருவாரூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்த... மேலும் பார்க்க

மாணவிகளிடம் பாலியல் சீண்டல்; ஆசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

தரங்கம்பாடி: திருக்கடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருக்கடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: வேதாரண்யம் வட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

திருவெண்காடு கோயிலில் ஜூலை 7-இல் கும்பாபிஷேகம்

பூம்புகாா்: நவகிரக தலங்களில் புதனுக்குரிய தலமான திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கோயிலில், சிவனின் 5 முகங்களில் ஒன்றா... மேலும் பார்க்க