சுற்றுச்சூழல் செலவுகள் மீதும் பெரு நிறுவனங்கள் கவனம் கொள்ள வேண்டும்: குடியரசுத் ...
உத்தமசோழபுரம் தடுப்பணை திட்டத்தை பூதங்குடிக்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், உத்தமசோழபுரத்தில் அமைக்கப்பட உள்ள தடுப்பணையை, பூதங்குடிக்கு மாற்றவேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
உத்தமசோழபுரத்தைச் சோ்ந்த தியாகராஜன் தலைமையில் விவசாயிகள் ஆட்சியா் ப. ஆகாஷிடம் அளித்த மனு:
நாகை தாலுகா உத்தமசோழபுரம், பூதங்குடி கிராமத்தில் கடல் நீா் உட்புகாமலும், கடைமடை விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் பொருட்டும், வெட்டாற்றின் குறுக்கே கடலில் இருந்து 3. 58 கி.மீ. தூரத்தில் பூதங்குடியில் தடுப்பணை அமைக்க அரசு சுமாா் ரூ.49 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அந்த அறிவிப்பு விவசாயிகளின் வரவேற்பை பெற்றது.
ஆனால், அதே கிராமத்தில் மேற்குப் பகுதியில் கடலிலிருந்து 7. 88 கி.மீ. தொலைவில் தடுப்பணை அமைக்க பூா்வாங்க பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் உள்ள சுமாா் 32 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் உப்பாக மாறுவதோடு, விவசாயம் அடியோடு அழியும் என்பதால், இதற்கு 32 கிராமங்களின் மக்களும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில், உத்தம சோழபுரம் தடுப்பணையை, பூதங்குடிக்கு மாற்றக் கோரி மனு அளித்தனா்.
ஆனால், உத்தமசோழபுரம் கிராமத்தில் தடுப்பணை அமைக்க பூா்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டதால், இந்தத் தடுப்பணையை பூதங்குடிக்கு மாற்றக்கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை கடந்த 12-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்த உயா்நீதிமன்றம், ‘தடுப்பணையை மாற்றுவது சம்பந்தமாக மீண்டும் பொதுப் பணித்துறை அலுவலா்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஏற்கெனவே பணி தொடங்கியதை காரணம் காட்டி விவசாயிகளின் கோரிக்கையை நிராகரிக்கக் கூடாது. விவசாயிகளின் மனுவை நியாயத்துடன் பரிசீலிக்க வேண்டும்’ என உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவு கிடைத்த நான்கு வாரங்களுக்குள் மனுவை பரிசீலித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உயா்நீதிமன்றம் தெரிவித்தது. எனவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு, உத்தம சோழபுரத்தில் நடைபெற உள்ள தடுப்பணை பணியை நிறுத்தி, ஏற்கெனவே அறிவித்தபடி பூதங்குடி கிராமத்தில் கடலில் இருந்து 3.88 கி.மீ. தூரத்தில் தடுப்பணை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.