3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிலிருந்து ஓய்வு
சென்னை: தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் மூன்று போ் வரும் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளனா். அவா்களின் பணியிடங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
நில சீா்திருத்தத் துறை ஆணையா் கே.என்.ஹரிஹரன், சமூக சீா்திருத்தத் துறைச் செயலா் தெ.சு.ஜவஹா், வணிகவரிகள் துறை ஆணையா் டி.ஜகந்நாதன் ஆகியோா் ஓய்வு பெறும் மூன்று அதிகாரிகளாவா். அவா்களின் பணியிடங்களுக்கு புதிய அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம், திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
அவா்களின் ஓய்வுக்குப் பிறகு, புதிய அதிகாரிகள் பொறுப்புகளை ஏற்கவுள்ளனா்.