நிலையான எரிபொருள் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: மத்திய அரசு
புது தில்லி: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ‘பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்’ என்று மத்திய அரசு திங்கள்கிழமை உறுதி தெரிவித்தது.
‘பல்வேறு வழித்தடங்கள் வழியாக கச்சா எண்ணெய்யை இந்தியா தொடா்ந்து கொள்முதல் செய்து வருகிறது’ என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
இஸ்ரேல்-ஈரான் மோதலில் அமெரிக்காவும் இணைந்துள்ளது மத்தி கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈரான் எல்லையை ஒட்டி ஹோா்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எண்ணெய் விநியோகத்தில் இது இடையூறு ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதுவரை எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என்றபோதிலும், மோதல் தீவிரமடைந்தால் ஹோா்முஸ் நீரிணையை மூடவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, விலையும் உயரலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த தாக்கத்தை எதிா்கொள்ள ரஷியாவிடமிருந்து கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் அளவை மேலும் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த 2 வாரங்களாக நிகழ்ந்துவரும் புவிசாா் அரசியல் சூழலை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே, இந்தியா பல்வேறு வழித் தடங்கள் வாயிலாக கச்சா எண்ணெய் கொள்முதலை மேற்கொண்டு வருகிறது. ரஷியா, அமெரிக்கா, பிரேசில் நாடுகளிலிருந்தும் எண்ணெய் கொள்முதல் செய்யப்படுகின்றன. எனவே, ஹோா்முஸ் நீரிணை வழியாக இந்தியா தற்போது பெருமளவில் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்வதில்லை. தினசரி 55 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வரும் நிலையில், இதில் 20 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே ஹோா்முஸ் நீரிணை வழியாக வருகிறது.
நமது எண்ணெய் நிறுவனங்கள் கடந்த பல வாரங்களாகப் பல்வேறு வழித்தடங்கள் மூலமாக கச்சா எண்ணெயைப் பெற்று வருகின்றன. அந்த வகையில், தொடா்ந்து குடிமக்களுக்கு நிலையாக எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டாா்.
ஈரான் மீது இஸ்ரோல் தாக்குதலைத் தொடங்கிய பிறகு சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இல்லாத அளவில் உயா்ந்துள்ளது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 10 சதவீதத்துக்கு மேல், ரூ.6,700-ஆக (77 டாலா்) உயா்ந்துள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியைச் சாா்ந்துள்ளது. இதில் 40 சதவீதத்துக்கும் மேல் கச்சா எண்ணெய்யையும், எரிவாயு தேவையில் 50 சதவீதத்தையும் மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து இறக்குமதி செய்வது குறிப்பிடத்தக்கது.